அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் லாரியில் ஏற்றிச் சென்ற சுமார் 14 மில்லியன் தேனீக்கள் தப்பியதால் அந்தப் பகுதி முழுவதும் தேனீக்களின் இரைச்சலால் சலசலப்பு ஏற்பட்டது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டுக்கு சற்று தெற்கே, லிண்டன், வாஷிங்டன் அருகே, கனடிய எல்லைக்கு அருகில், அதிகாலை 4 மணியளவில், சுமார் 70,000 பவுண்டுகள் (31,751 கிலோகிராம்) தேனீக் கூட்டங்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததாக வாட்காம் கவுண்டி […]
