ஆர்சிபி கோப்பையை வெல்ல உதவிய சென்னை அணி! எப்படி தெரியுமா?

Royal Challengers Bengaluru: கடந்த 18 சீசன்களாக கோப்பையை வெல்ல போராடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இந்த ஆண்டு கோப்பை கிடைத்துள்ளது. இதன் மூலம் தங்களது 18 வருட தவத்தை கலைத்துள்ளனர். ரஜத் பட்டிதார் தலைமையில் ஆர்சிபி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த சீசன் தொடக்கத்திலிருந்து ஆர்சிபி ஒரு பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தது. ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அணியில் இருந்த குறைகளை சிறப்பான முறையில் சரி செய்தனர். இது அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைத்துள்ளது. 

மேலும் படிங்க: ஐபிஎல் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியல்!

பைனலில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 190 ரன்கள் குவித்தது. 20 முதல் 30 ரன்கள் கம்மியாக அடித்ததாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பவுலிங்கில் அதனை சரி செய்தனர். குறிப்பாக க்ருனால் பாண்டிய சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவினார். 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 184 ரன்கள் மட்டுமே அடித்தது. முக்கியமான கட்டத்தில் சில வீரர்களின் விக்கெட்களை இழந்ததால் பஞ்சாப் அணியால் வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி உள்ளது. இருப்பினும் ஆர்சிபி கோப்பையை வெல்வதற்கு சென்னை அணியும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. 

ஆர்சிபிக்கு உதவிய சிஎஸ்கே!

கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேற்றியது. ஆனால் இந்த ஆண்டு ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் தான் உதவியுள்ளது. ஆர்சிபி அணி பிளேஆப்-ஐ உறுதி செய்து இருந்தாலும், முதல் இடங்களை பிடிக்கவில்லை. மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025ல் முதல் அணியாக பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி இருந்தது. சென்னை அணி தங்களது கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அப்போது குஜராத் அணி புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது.

இந்நிலையில் அந்த போட்டியில் சென்னை அணியுடன் வெற்றி பெற்று இருந்தால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை உறுதி செய்து இருக்கலாம். ஆனால் தோல்வியை தழுவியது குஜராத். அதே சமயம் ஆர்சிபி அணி 17 புள்ளிகளை பெற்றிருந்தது. சென்னை அணி அந்த போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்றதால் ஆர்சிபி அணிக்கு சாதகமாக அமைந்தது. தங்களது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று 19 புள்ளிகளுடன் 2வது இடத்தை உறுதி செய்தனர். ஒருவேளை சிஎஸ்கேவுடன் குஜராத் வெற்றி பெற்று இருந்தால் பஞ்சாப் மற்றும் குஜராத் முதல் இரண்டு இடங்களை பிடித்து இருப்பார்கள். ஆர்சிபி மற்றும் மும்பை எலிமினேட்டரில் விளையாடி இருக்கும். ஆனால் சிஎஸ்கே பெற்ற வெற்றியின் மூலம் முதல் குவாலிபரில் விளையாடியது ஆர்சிபி. அதில் வெற்றி பெற்று முதல் அணியாக பைனலுக்கும் சென்றனர், தற்போது கோப்பையும் வாங்கி உள்ளனர்.

மேலும் படிங்க: ஐபிஎல் முடிந்த உடன்… பயிற்சியாளர்களை கழட்டிவிடும் இந்த 4 அணிகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.