அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தங்களது 18 வருட கனவை பூர்த்தி செய்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து தங்களது முதல் கோப்பை கனவை இழந்துள்ளது. வெற்றி பெற்ற உற்சாகத்தில் விராட் கோலி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் ஆர்சிபி அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற அணியை வம்பிழுத்த ஆர்சிபி
பொதுவாக ஆர்சிபி அணியை பலரும் கலாய்ப்பதற்கு அவர்களின் அணி நிர்வாகமும், ரசிகர்களின் ஆணவ பேச்சும் தான் காரணம். அந்த வகையில் நேற்று போட்டியை வெற்றி பெற்றவுடன் ஆர்சிபி அணி தங்களது சமூக வலைத்தள கணக்கில் Humanity Saved என்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். பொதுவாக இரு அணிகள் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதில் ஒரு அணி நிர்வாகமே கலந்து கொண்டு இப்படி பேசுவது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படத்தை ஆர்சிபி நிர்வாகம் இன்னும் நீக்கவில்லை.
வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரஜத் பட்டித்தார்
“இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது, விராட் கோலி மற்றும் பல ஆண்டுகளாக அணிக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் சிறப்பு வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள். குவாலிஃபையர் 1க்குப் பிறகு, அந்த நேரத்தில் நாங்கள் இதைச் செய்ய முடியும் என்று நினைத்தோம். இந்த பிட்சில் 190 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோர் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. கிருணால் தேவையான நேரத்தில் விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர். போட்டியில் அழுத்தம் ஏற்படும் போதெல்லாம், நான் அவரை தான் தேடுகிறேன்.
சுயாஷும் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக பந்து வீசினார். மேலும் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களான புவி, யாஷ், ஹேசில்வுட் மற்றும் ரொமாரியோ வந்த விதம் மற்றும் அவர் 2-3 ஓவர்கள் கொடுத்த விதம் மற்றும் திருப்புமுனை சிறப்பு வாய்ந்தது. எனக்கு விராட் கோலிக்கு கீழ் கேப்டன் பதவியை வகிக்க ஒரு சிறந்த வாய்ப்பு, அது எனக்கு ஒரு சிறந்த கற்றல். நான் சொன்னது போல், விராட் கோலி வேறு யாரையும் விட கோப்பையை வெல்ல தகுதியானவர். விராட் கோலி மற்றும் அனைத்து ரசிகர்களும் தகுதியானவர். ஆதரித்த அனைவரும் – நிர்வாகம், ஆதரவு ஊழியர்கள் – அவர்கள் வீரர்களை ஆதரித்த விதம் அழகாக இருந்தது. ரசிகர்களுக்கு ஒரு வரி சொல்ல விரும்புகிறேன் – ஈ சாலா கப் நம்து” என்று தெரிவித்துள்ளார்.