பாரீஸ்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காப் (அமெரிக்கா) உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற 3-வது செட்டை கோகோ காப் கைப்பற்றினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோகோ காப் 6-7, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரில் கோகோ காப் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.