கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை‌: பிரேமலதா விஜயகாந்த் தகவல்

தரு​மபுரி: தரு​மபுரி​யில் தேமு​திக நிர்​வாகி இல்​லத் திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 234 தொகு​தி​களுக்​கும் பொறுப்​பாளர்​களை நியமித்​து, தேர்​தல் பணி மேற்​கொள்​கிறோம்.

இதற்​காக விரை​வில் மாநில, மாவட்​டச் செய​லா​ளர்​களுக்​கான கூட்​டம் நடை​பெற உள்​ளது. வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் மாநாடு நடத்த உள்​ளோம். தொடர்ந்து எங்​கள் பயணம் தொடரும். பாஜக​வில் இருந்​து, கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்கு எங்​களுக்கு எந்த அழைப்​பும் வரவில்​லை‌.

அதே​நேரத்​தில், அதி​முக கூட்​ட​ணி​யில் இல்லை என்று நாங்​கள் எங்​கும் சொல்​ல​வில்​லை. திமுக பொதுக்​குழு​வில் நிறைவேற்​றப்​பட்ட இரங்​கல் தீர்​மானத்​துக்கு நன்றி சொன்​னோம். இது அரசி​யல் நாகரி​கம்.

எந்​தக் கட்​சி​யாக இருந்​தா​லும் பிறந்த நாள் வாழ்த்து சொல்​வது, அதற்கு நன்றி சொல்​வது அரசி​யல் மாண்​பு, அதைத்​தான் நாங்​கள் செய்​தோம். இதனால் கூட்​டணி மாறு​மா, அதே கூட்​டணி தொடருமா என்​பது உங்​கள் கற்​பனை. கூட்​டணி தொடர்​பான இறுதி முடிவை கட்​சி​யின் தலை​மைக் கழகம் ஜனவரி 9-ம் தேதி அறிவிக்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.