மலப்புரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி சார்பில் ஆரியாடன் சவுகத் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா எம்.பி. வருகிற 14-ந் தேதி நிலம்பூர் வருகிறார். அவர் நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :