இந்தியர் சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்பும் ஆக்சியம்-4 ஏவுதல் மீண்டும் தள்ளிவைப்பு – காரணம் என்ன?

புளோரிடா: இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4 பயணத்தின் ஏவுதல் இன்று ஐந்தாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று ஸ்பேஸ்-எக்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன் 11 புதன்கிழமை, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A (LC-39A)-லிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஃபால்கன் 9-இன் ஆக்சியம் ஸ்பேஸின் ஆக்சியம் மிஷன் 4 (ஆக்ஸ்-4) ஏவுதலில் இருந்து ஸ்பேஸ்-எக்ஸ் விலகுகிறது. ஃபால்கன் 9 ஏவுகணையின் நிலையான தி பூஸ்டர் ஆய்வுகளின் போது அடையாளம் காணப்பட்ட LOx கசிவை சரிசெய்ய ஸ்பேஸ்-எக்ஸ் குழுக்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்த பணி முடிந்ததும், நாங்கள் ஒரு புதிய ஏவுதல் தேதியைப் பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஃபால்கன் 9 விண்கலத்தின் பூஸ்டர் நிலையின் செயல்திறனை சரிபார்க்க ஏவுதள வாகன தயாரிப்பின் ஒரு பகுதியாக, ஏவுதளத்தில் ஏழு வினாடிகள் சூடான சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது LOX கசிவு கண்டறியப்பட்டது என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. இது குறித்து இஸ்ரோ குழு ஆக்சியம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிபுணர்களுடன் நடத்திய விவாதத்தின் அடிப்படையில், கசிவை சரிசெய்து, ஏவுதலுக்குத் தேவையான சரிபார்ப்பு சோதனையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முதல் இந்திய கேப்டனை ஐஎஸ்எஸ்-க்கு அனுப்புவதற்காக ஜூன் 11, 2025 அன்று திட்டமிடப்பட்ட ஆக்சியம்-4 ஏவுதல் ஒத்திவைக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்த ஏவுதல் செவ்வாய்க்கிழமையன்று திட்டமிடப்பட்டது, ஆனால், மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்பாக மோசமான வானிலை காரணமாக இந்த ஏவுதல் ஜூன் 8-ம் தேதியிலிருந்து ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சுபான்ஷு சுக்லா யார்? – அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.

இதன்​படி, அமெரிக்​கா​வின் புளோரி​டா​வில் உள்ள கென்​னடி விண்​வெளி மையத்​திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் டிராகன் விண்​கலம் ஏவப்பட உள்ளது. இந்த விண்​கலத்​தில் அமெரிக்​கா, இந்​தி​யா, போலந்து மற்​றும் ஹங்​கேரி நாடு​களைச் சேர்ந்த தலா ஒரு​வர் என 4 பேர் பயணிக்க உள்​ளனர். இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனத்​தின் (இஸ்​ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானி​யாக செயல்பட உள்ளார். இந்த விண்​கலம் 28 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடை​யும் என நாசா தெரி​வித்​துள்​ளது. இவர்கள் அங்கு 14 நாட்​கள் தங்கி இருப்​பார்​கள் என கூறப்​படு​கிறது.

கடந்த 1984-ம் ஆண்டு சர்​வ​தேச விண்​வெளி நிலையத்​துக்கு சென்ற ரஷ்​யா​வின் சோயுஸ் விண்​கலத்​தில் இந்​தி​ய​ரான ராகேஷ் சர்மா பயணித்​தார். சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு சென்ற முதல் இந்​தி​யர் என்ற பெருமை இவருக்கு கிடைத்​தது. 41 ஆண்​டு​களுக்​குப் பிறகு விண்​வெளி நிலை​யம் செல்​லும் இந்​தி​யர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்​ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோவை சேர்ந்​த சுபான்ஷு சுக்​லா, கடந்த 2006-ல் இந்​திய விமானப்​படை​யில் சேர்ந்​தார். 2024-ம் ஆண்​டில் குழு கேப்​ட​னாக பொறுப்​பேற்​றார். இந்த சூழ்​நிலை​யில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்​ரோ​வின் ககன்​யான் திட்​டத்​துக்​காக சுபான்ஷு தேர்வு செய்​யப்​பட்​டார். இதற்​காக ரஷ்​யா​வின் யூரி காகரின் விண்​வெளி மையத்​தில்​ சேர்ந்​து இவர் சிறப்​பு பயிற்​சி பெற்​றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.