போடி: போடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டு படுக்கையில் தாயும் சேயும் படுத்திருந்த நிலையில், திடீரென மேலே இருந்த சீலிங் பேன் கழன்று விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக படுக்கையில் இருந்த தாயும், சேயும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று, பெற்றோர்களும், பொதுமக்களும் மருத்துவமனை அதிகாரிகளை வலியுறுத்தினர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. […]
