பாட்னா: லாலு பிரசாத்தின் 78-வது பிறந்த தினம் கடந்தவாரம் கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், உடல்நிலை சரியில்லாத லாலு சோபாவில் அமர்ந்து, அருகிலுள்ள சோபாவில் கால்களை நீட்டிக்கொண்டுள்ளார்.
அப்போது ஒரு ஆதரவாளர் அம்பேத்கரின் உருவப்படத்தை லாலு கால்களுக்கு அருகில் வைத்து அவரை வாழ்த்தினார். இது பெரும் புயலை கிளப்பியுள்ளது. அம்பேத்கருக்கு அவமரியாதையை ஏற்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் லாலு மீது குற்றம்சாட்டியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க பிஹார் எஸ்சி ஆணையம் லாலுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.