கமலை​ மன்னிப்பு கேட்க சொல்வதுதான் நீதிபதியின் பணியா? – ‘தக் லைஃப்' வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்

துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்​ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம், கமல்​ஹாசனை மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​திய நீதிபதிக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்​தது’ என்று `தக் லைஃப்’ பட இசை வெளி​யீட்டு விழா​வில் கமல் பேசி​யதற்கு எதி​ராக க‌ர்​நாடகா உயர் நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதிபதி நாகபிரசன்​னா, ‘‘கமல்​ஹாசன் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் படத்தை திரை​யிட முடி​யாது”என்று கூறி, மன்​னிப்பு கேட்​கு​மாறு வலி​யுறுத்​தி​னார்.

இதற்கு எதி​ராக சமூக ஆர்​வலர் மகேஷ் ரெட்டி என்​பவர் உச்ச நீ​தி​மன்​றத்​தில் பொதுநல மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நேற்று நீதிப​தி​கள் உஜ்ஜால் புயன், மன்​மோகன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், ‘‘கர்​நாடக திரைப்பட வர்த்தக சபை​யின் தடை, அரசி​யலமைப்​பில் குறிப்​பிட்​டுள்ள பேச்​சு, கருத்து சுதந்​திரத்தை பறிக்​கும் செயல். கன்னடஅமைப்​பினரின் மிரட்​டலுக்கு கர்​நாடக அரசு பணிந்​துள்​ளது”என வாதிடப்​பட்​டது.

நீதிபதி மன்​மோகன், ‘‘நாடு முழு​வதும் தக் லைஃப் படத்தை வெளி​யிட மத்​திய திரைப்​படச் சான்​றிதழ் வாரி​யத்​தின் சான்​றிதழ் போது​மானது. அதைப் பெற்ற படத்தை திரை​யிடு​வதை யாராலும் தடுக்க முடி​யாது. குறிப்​பிட்ட கும்​பலோ, அமைப்​பினரோ சட்​டத்தை மீறு​வதை அனு​ம​திக்க முடி​யாது. திரையரங்கை கொளுத்​து​வோம் என கன்னட அமைப்​பினர் எச்​சரித்​தால், சட்​டம் ஒழுங்குக்கு பொறுப்​பான கர்​நாடக அரசு எப்​படி அமை​தி​யாக இருக்க முடி​யும்?

ஒரு கும்​பல் திரையரங்​கையோ, தெரு​வையோ கட்​டுப்​பாட்​டில் வைத்​திருப்​பதை அனு​ம​திக்க முடி​யாது. சட்​டத்​தின் ஆட்​சியை மீறு​வதை, கர்​நாடக அரசு எவ்​வாறு அனு​ம​திக்​கிறது? கர்​நாட​கா​வில் அனை​வரும் தக் லைஃப் படத்தை பார்க்க வேண்​டுமென ஆணை பிறப்​பிக்க முடி​யாது. ஆனால், நிச்​சய​மாக அந்​தப்படம் கர்​நாட​கா​வில் திரை​யிடப்பட வேண்​டும் என ஆணை பிறப்​பிக்க முடி​யும். கமல்​ஹாசன் கருத்​துக்கு மாற்று கருத்து தெரிவிக்​கலாம். பெங்​களூரு​வில் உள்ள அறி​வுஜீவி​கள் கூட்​டறிக்கை வெளி​யிடலாம். அதனை விடுத்து திரையரங்கை கொளுத்​து​வோம் என்​பதை ஏற்க முடி​யாது.
கமல்​ஹாசன் மன்​னிப்பு கேட்க வேண்​டுமென கர்​நாடக உயர் நீதி​மன்ற நீதிபதி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது​தான் நீதிப​தி​யின் பணி​யா? இந்த வழக்​கில் கர்​நாடக அரசு ஏன் இன்​னும் பதில் மனு தாக்​கல் செய்​யாமல் இருக்​கிறது? ஜூன் 18-ம் தேதி (இன்​று) பதில் தாக்​கல் செய்ய வேண்​டும். மறு​நாள் (ஜூன் 19) நாங்​கள் இந்த வழக்கை மீண்​டும் விசா​ரிக்​கிறோம்​”என்​றார்​.

கர்நாடகாவில் திரையிடப்படும்: கர்​நாடக துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் கூறும்​போது, “உச்​சநீ​தி​மன்​றத் தீர்ப்பை ஏற்​கிறோம். எல்​லா​வற்​றுக்​கும் எல்லை இருக்​கிறது. கன்னட அமைப்​பினர் அதை புரிந்து நடக்க வேண்​டும். சட்​டத்தை யாரும் கையிலெடுப்​பதை அனு​ம​திக்க முடி​யாது. கர்​நாட​கா​வில் அமைதி நிலை​நாட்​டக் கடமைப்​பட்​டிருக்​கிறோம். நாங்​கள் கன்னட அமைப்​பினருக்கு சுதந்​திரம் அளித்​திருந்​தா​லும், உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்​டிய நிலை​யில் இருக்​கிறோம். எனவே தக் லைஃப் திரைப்​படம் கர்​நாட​கா​வில் விரை​வில் திரை​யிட அனு​ம​திக்​கப்​படும்​”என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.