பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்காளர் செல்போன் பாதுகாக்க திட்டம்

புதுடெல்லி: பிஹார் சட்​டப் பேர​வைத் தேர்​தல் வரும் நவம்​பர் மாதம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் உதவி இயக்​குநர் அபூர்வ குமார் கூறிய​தாவது: பிஹார் தேர்​தலில் நாட்​டிலேயே முதன்​முறை​யாக வாக்​குச்​சாவடிக்கு வரும் வாக்​காளர்​களின் செல்​போன்​களை பாது​காத்து வைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதை பிஹார் தேர்​தலில் அறி​முகம் செய்​ய​வுள்​ளோம். வாக்​குச்​சாவடிக்கு உள்ளே வரும் வாக்​காளர்​களிட​மிருந்து செல்​போன்​களை வாங்கி வைத்​துக் கொள்​வோம். அவர்​கள் வாக்​களித்து விட்டு வாக்​குச்​சாவடிக்கு வெளியே வரும்​போது அவர்​களது செல்​போன்​கள் திரும்ப ஒப்​படைக்​கப்​படும். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.