புதுடெல்லி: பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உதவி இயக்குநர் அபூர்வ குமார் கூறியதாவது: பிஹார் தேர்தலில் நாட்டிலேயே முதன்முறையாக வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் செல்போன்களை பாதுகாத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை பிஹார் தேர்தலில் அறிமுகம் செய்யவுள்ளோம். வாக்குச்சாவடிக்கு உள்ளே வரும் வாக்காளர்களிடமிருந்து செல்போன்களை வாங்கி வைத்துக் கொள்வோம். அவர்கள் வாக்களித்து விட்டு வாக்குச்சாவடிக்கு வெளியே வரும்போது அவர்களது செல்போன்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.