லண்டன்,
9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் தொடரில் லண்டனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் பணிந்தது. இந்த தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.
அர்ஜென்டினா அணியில் அகஸ்டினா கோர்சிலானி 3 கோலும் (40-வது, 54-வது மற்றும் 59-வது நிமிடங்களில்), விக்டோரியா பலாஸ்கோ (29-வது நிமிடம்) ஒரு கோலும் போட்டனர். இந்தியா தரப்பில் தீபிகா (30-வது நிமிடம்) ஆறுதல் கோல் அடித்தார். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மீண்டும் அர்ஜென்டினாவை இன்று சந்திக்கிறது.
Related Tags :