வந்தாச்சு BSNL 5G சேவை.. இனி எல்லாமே வேகம், Q 5G என பெயரில் அறிமுகம்

Bsnl 5g service launched Q 5g Quantum 5g: நாட்டின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தற்போது 5G நெட்வொர்க் போட்டியில் நுழைய முழுமையாக தயாராக உள்ளது. அதன்படி BSNL தற்போது தனது 5G சேவையின் புதிய பெயரை அறிவித்துள்ளது. இப்போது இந்த சேவை ‘Q-5G’ என்கிற பெயரில் அழைக்கப்படும், அதாவது குவாண்டம் 5G ஆகும். சமூக ஊடகங்களில் மக்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்ற பிறகு BSNL நிறுவனம் இந்த பெயரை முடிவு செய்துள்ளது. மக்கள் Q-5G என்ற பெயரை மிகவும் விரும்புவதாக பிஎஸ்என்எல் ‘X’ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் இது நிறுவனத்தை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விரைவில் 5G சோதனை, வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் நிறைவு
BSNL தனது 5G சேவையை தொடங்குவதற்கான முழு தயாரிப்புகளையும் செய்து வருகிறது. இதன் மூலம் 5G சோதனை வரும் சில மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே நாடு முழுவதும் 1 லட்சம் 4G/5G டவர்களை இப்போது நிறுவியுள்ளது, அவற்றில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இப்போது BSNL படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதன் 5G சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது, இது மக்களுக்கு அதிவேக இணையம் மற்றும் சிறந்த நெட்வொர்க் வசதிகளை வழங்கும்.

You named It. We made it happen!

Introducing THE BSNL Q-5G – Quantum 5G.

A Big THANK YOU to each and every one of you for your incredible support and enthusiastic participation.

Because of you, we now have a name that reflects the power, speed, and future of BSNL’s 5G network.… pic.twitter.com/m7UIMuFceh

— BSNL India (@BSNLCorporate) June 18, 2025

நாடு முழுவதும் மேலும் 1 லட்சம் மொபைல் டவர்களை நிறுவும்
மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி சமீபத்தில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் மேலும் 1 லட்சம் புதிய 4ஜி மொபைல் டவர்களை நிறுவும் என்று அறிவித்தார். கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்த பிஎஸ்என்எல்லின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல் படும். முதல் 1 லட்சம் டவர்களின் பணிகள் முடிந்தவுடன், அடுத்த கட்டத்திற்கு பிஎஸ்என்எல் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறும். இதன் பிறகு, புதிய டவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரிக்கும், இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு விரைவான மற்றும் சிறந்த நெட்வொர்க்கை பிஎஸ்என்எல் வழங்கும்.

5ஜி திட்டம் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது:
பிஎஸ்என்எல்லின் 5ஜி திட்டம் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2023 ஆண் ஆண்டில், தொலைத்தொடர்பு உபகரணங்களை வழங்குவதற்காக தேஜாஸ் நெட்வொர்க்ஸுடன் எரிக்சனுடனும், மொபைல் டவர்களை நிறுவுவதற்காக டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனத்துடனும் நிறுவனம் கூட்டு சேர்ந்தது. இந்த டவர்களின் பராமரிப்புக்காக அரசாங்கம் 10 ஆண்டுகளில் ரூபாய் 13000 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ‘தன்னம்பிக்கை இந்தியா’ என்ற திசையில் ஒரு வலுவான முயற்சியாகக் கருதப்படுகிறது. விரைவில் BSNL இன் Q-5G சேவை சந்தையில் இருக்கும், இதன் மூலம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை பிஎஸ்என்எல் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.