போர்க்களத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது – பிரதமர் மோடி

சாக்ரெப்,

பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குரோஷியா பிரதமர் பென்கொவிக் விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.

குரோஷியா பயணத்தின்போது அந்நாட்டின் ஜனாதிபதி சோரன் மிலனொவ்வை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-குரோஷியா இடையே பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சுடன் இணைந்து ஒரு கூட்டு செய்திக்குறிப்பில், இரு நாடுகளும் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளதாகவும், இந்தியா குரோஷியாவுடன் அதன் விண்வெளி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “எங்கள் மூன்றாவது பதவிக்காலத்தில் எங்கள் இருதரப்பு உறவுகளை மூன்று முறை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம். பாதுகாப்புத் துறையில் நீண்டகால ஒத்துழைப்புக்காக ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம் உருவாக்கப்படும், இது பயிற்சி மற்றும் இராணுவ பரிமாற்றம் மற்றும் பாதுகாப்புத் துறையில் கவனம் செலுத்தும். நமது பொருளாதாரங்கள் ஒன்றையொன்று பூர்த்தி செய்யக்கூடிய பல பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, பிரச்சினைகளை போர்க்களம் மூலம் தீர்க்க முடியாது. எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கும் மரியாதை அவசியம். இந்தி மொழியில் எனது கருத்துக்களை இங்கு முன்வைப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.