வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அன்புள்ள மகளே
நீ நல்லா இருப்பேன்னு நான் நம்புறேன்
நான் இங்க நல்லாருக்கேன், நீ அம்மாவோட வயித்துல இருக்கும் போது இங்கு வந்தேன் இப்போ நீ என் மனசு பூராம் இருக்க, இன்னும் ஒன்னு ரெண்டு வருசத்துல ஊருக்கு வந்துருவேன்! அப்பாயி ஆபரேஷன் செலவுக்கு வாங்கிய பணத்தை சீக்கிரம் கட்டிட்டா அடுத்த வருஷமே வந்தாலும் வந்துருவேன்.
பாப்பா ஒன்ன பாக்கனும்,தொட்டு கொஞ்சனும்,தூக்கி சுமக்கனும், ஊரு சுத்தனும், என் நெஞ்சு மேல போட்டு தூங்க வைக்கனும், பவுடரடுச்சு, பொட்டு வச்சு அழகு பாக்கனும், இப்படி நிறைய ஆசெ இருக்கு பாப்பா ரொம்ப சேட்டை பண்ணாமெ அம்மா சொல்லுறத ஒழுங்க கேட்டு இருக்கனும் பாப்பா.

அப்புறம் ஒனக்காண்டி பொம்மையெல்லாம் வாங்கி வைச்சுருக்கேன். வரும்போது கொண்டாரேன்.இங்க சந்துரு மாமா தினேஷ் மாமா அப்புறம் ஹிந்திக்கார மாமா எல்லாரும் உன்னைய கேட்டதாக சொல்ல சொன்னாங்க “ஹிந்திகார மாமா”, நான் ஊருக்கு வர்றப்ப பை நிறைய சாக்லேட் உனக்கு வாங்கி தரேன்னு சொன்னாரு.
நீ சிலேட்டில “அ” எழுதனத அம்மா, மாமா செல்லுல போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப்ல அனுப்புனத பார்த்தேன்! ரொம்ப அழகா எழுதி இருந்த பாப்பா. இன்னும் நீ நிறைய எழுதணும்; பெரிய எழுத்தாளராகனும் சரியா. இத படிச்சு, அம்மா சொல்லும் போது, நீ என்ன சொல்வெ என்ன செய்வேனு எனக்கு தெரியாது. அத அம்மா அப்படியே பதில்
கடிதம் போட்டா ரொம்ப சந்தோஷம் படுவேன்.
இப்படிக்கு
அப்பா
