சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வீடுகளில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த அனுமதி தேவை என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா அத்திக்கடையில் ஒரு வீட்டை கிறிஸ்தவ மதபோதகர் ஜோசப் வில்சன் என்பவர் விலைக்கு வாங்கி இந்த வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் வந்து விசாரித்து உள்ளார். பிறகு இந்த கட்டிடத்துக்கு கட்டிட அனுமதியும், தேவாலயம் கட்டுவதற்கு திட்ட அனுமதியும் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் […]
