இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்தை ஐசிசி அதிகாரப்பூர்வமாக கண்டித்து உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய போது 61-வது ஓவரில் பந்து சேதமடைந்து விட்டதாகவும், வேறு பந்தை மாற்றித் தர வேண்டியும் ரிஷப் பந்த் அம்பையரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் பந்து நன்றாக தான் உள்ளது, இதனை மாற்றித் தர முடியாது என்று அம்பயர் கூறியதால் கோபம் அடைந்த ரிஷப் பந்த் வேகமாக பந்தை அம்பயரை நோக்கி வீசினார். இதனால் அம்பயருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் ஐசிசியின் நடத்தை விதிகளின்படி இது குற்றமாகும்.
England win the opening Test by 5 wickets in Headingley#TeamIndia will aim to bounce back in the 2nd Test
Scorecard https://t.co/CuzAEnBkyu#ENGvIND pic.twitter.com/9YcrXACbHn
— BCCI (@BCCI) June 24, 2025
இதனால் ரிஷப் பந்த்க்கு அடுத்த போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுமா என்ற கேள்விகளும் இருந்தது. இந்நிலையில் ரிஷப் பந்த்திற்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எந்த ஒரு தடையும் விதிக்கப்படாது என்றும் தொடர்ந்து இதே போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டால் தடை விதிக்கப்படலாம் என்றும் ஐசிசி தரப்பில் கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த்.
இந்தியா தோல்வி
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் ஐந்து போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இருந்தாலும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க சிரமப்பட்டனர். இது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் மைதானத்தில் ஜூலை 2 முதல் ஜூலை 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.