சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு ரயில் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ரத்​து

சென்னை: காட்பாடி பணிமனையில் இரவு 9 முதல் நள்ளிரவு 12.30 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 27, 28 தேதிகளில் மெமு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நாளை திருப்பதியில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயிலும், காட்பாடியில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் மெமு ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், 26, 28 தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயில், சேவூர் காட்பாடி இடையேயும், விழுப்புரத்தில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயில், வேலூர் – காட்பாடி இடையேயும் பகுதி ரத்து செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.