சர்வதேச கிரிக்கெட்: புதிய விதிமுறைகள் அறிமுகம்.. ஐ.சி.சி. அதிரடி முடிவு

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதுபோக சில விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஐ.சி.சி.-ன் இந்த அதிரடி முடிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அவை விவரம் பின்வருமாறு:-

1.பந்தின் மீது சலிவா பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. ஆனால் பந்தின் மீது சலிவா பயன்படுத்தப்பட்டது அறியப்பட்டால் பந்தை மாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. பந்தை மாற்ற வேண்டும் என்பதற்காக சில அணிகள் வேண்டுமென்றே சலிவா பயன்படுத்துவதை தடுக்க இந்த விதிமுறை கொண்டு வரப்படுகிறது. ஆனால் இவ்வாறு செய்தால் தண்டனையாக பேட்டிங் அணிக்கு 5 ரன் வழங்கப்படும் நடைமுறை தொடரும். அதே சமயம் பந்தின் தன்மை மோசமாக சேதமடைந்திருந்தால் மட்டுமே நடுவர்கள் பந்தை மாற்றுவார்கள்.

2. முன்னதாக விக்கெட் கீப்பர் பந்தை கேட்ச் செய்ததை எதிர்த்து ஒரு பேட்ஸ்மேன் அப்பீல் செய்யும்போது பந்து பேட்டில் பட்டதா? இல்லையா? என்பது ‘அல்ட்ரா எட்ஜ்’ தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்படும். ஒரு வேளை பந்து பேட்டில் படவில்லை. காலுறையில் (பேடு) மட்டுமே உரசி இருப்பது தெரியவந்தால் தீர்ப்பு மாற்றப்பட்டு நாட்-அவுட் வழங்கப்படும். ஆனால் இனி வரும் காலங்களில் பந்து காலுறையில் உரசியதால் அது எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டாக இருக்குமா? என்பதையும் 3-வது நடுவர் சோதிப்பார்.

3. சில நேரங்களில் பீல்டர்கள் தெளிவான கேட்ச் பிடிக்காமல் வேண்டுமென்றே விக்கெட்டை கேட்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் கேட்ச் தெளிவாக இல்லையென்று கண்டறிந்தால் நடுவர் அதை நோ-பால் என்று அறிவிப்பார்.

4.ஒரு பந்தில் ஒரு பேட்ஸ்மேன் எல்பிடபிள்யூ மற்றும் ரன் அவுட்டாகிறார் என்றால் அந்த இரண்டையும் தனியாக ரிவ்யூ எடுக்கலாம். ஆனால் முதலில் எல்பிடபிள்யூ என்று தெரிய வந்தால் அது டெட் பால் என்று முடிவெடுக்கப்பட்டு விக்கெட் வழங்கப்படும். ரன் அவுட் சோதிக்கப்பட மாட்டாது.

5. இதற்கு முன் கேட்ச்சை சோதிக்கும் போது நோ-பால் என்று தெரிந்தால் நடுவர்கள் அத்தோடு அனைத்தையும் முடித்து விடுவார்கள். இனிமேல் நோ-பால் என்றாலும் கேட்ச் சோதிக்கப்படும். அது சரியான கேட்ச் என்றால், நோ-பாலுக்குரிய எக்ஸ்டிரா ஒரு ரன் எப்போதும் போல் வழங்கப்படும். ஆனால் அது துல்லியமான கேட்ச் இல்லை என்று தெரியவந்தால், அந்த சமயத்தில் பேட்ஸ்மேன் ஓடியிருந்தால் அதற்குரிய ரன்னும் சேர்த்து வழங்கப்படும்.

6. சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் எக்ஸ்ட்ரா ரன்கள் எடுப்பதற்காக வேண்டுமென்றே முதல் ரன்னை வெள்ளைக்கோட்டை தொடாமல் வேகமாக ஓடி எடுப்பார்கள். இனிமேல் அது போன்ற சூழ்நிலையில் ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் வேண்டுமென்றே கிரீசில் சரியாக தொடாமல் அந்த ரன்னை முழுமை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டால், பேட்டிங் அணிக்கு 5 ரன் தண்டனையாக அவர்களது ஸ்கோரில் குறைக்கப்படும். அத்துடன் இவ்வாறான சூழலில் அடுத்த பந்தை இருவரில் எந்த பேட்ஸ்மேன் சந்திக்க வேண்டும் என்பதை பவுலிங் அணியிடம் கேட்டு இனிமேல் நடுவர் முடிவு செய்வார்.

அதுபோக உள்ளூர் போட்டிகளில் ஒரு வீரர் முழுமையாக காயத்தை சந்திக்கும்போது புதிதாக வரும் மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட அனைத்தையும் செய்யலாம். அதை நடுவர் சோதித்து முடிவெடுப்பார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.