தலைமறைவான வங்கி மோசடி குற்றவாளி: 40 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த அசோக் டிரேடிங் நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர் சதீஷ் குமார் ஆனந்த். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து கடந்த 1977-ம் ஆண்டு பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.5.69 லட்சத்தை கடனாக பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக 1978-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த 2009-ம் ஆண்டு நீதிமன்றத்தால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், தண்டனை பெற்று 40 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு டெல்லியில் உள்ள ரோஹிணி பகுதியில் வைத்து ஆனந்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.