Killer: 'உங்கள் அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ!' – இயக்குநராக நெகிழும் எஸ்.ஜே.சூர்யா

10 வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘கில்லர்’.

இந்தப் படத்தில் ‘அயோத்தி’ பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடிக்கிறார்.

கடந்த வாரம் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டிருந்த நிலையில் படத்திற்கானப் பூஜை நடைபெற்று இருக்கிறது.

'கில்லர்' படம்
‘கில்லர்’ படம்

அதுதொடர்பானப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ‘கில்லர்’ படத்தின் மூலம் இயக்குநர் பயணத்தைத் தொடங்கவிருக்கும் எனக்கு, அபரிமிதமான அன்பைக் கொடுத்த எனது சினிமா நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது நன்றிகள்.

அன்பைப் பொழிந்து ஆதரவளித்திருக்கிறீர்கள், இந்த அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ! ‘கில்லர்’ படம் தொடர்பாக விரைவில் அப்டேட்ஸ் வரும். தொடர்ந்து அதற்காக இணைந்திருங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இப்படத்தின் ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ரானியும் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். ” ஒரு அழகானத் தொடக்கம். எப்போதும் ஒரு உத்வேகத்தைத் தரும் எஸ்.ஜே.சூர்யா சாருடன் இணைந்து புதிய பயணத்தின் பூஜையைத் தொடங்கி இருக்கிறோம்.

உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுடனும் ஆதரவுடனும்.” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.