மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் படுகொலை: அமித்ஷா

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பங்கேற்றார். இதன்பின்னர் அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், அசாம், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வரும் சூழலில் அந்த மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மணிப்பூர் கவர்னரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். எந்தவொரு கடினம் வாய்ந்த சூழலையும் எதிர்கொள்வதற்கு சாத்தியப்பட்ட எல்லா உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என உறுதியளித்தேன். … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்கா வீராங்கனை அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 7-5, 6-3 என்ற செட்கணக்கில் அமெண்டா அனிசிமோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சபலென்கா சீனாவின் … Read more

பெண் ஊழியரை கட்டியணைத்து முத்தமிட்ட மேலாளர் – கோர்ட்டு அளித்த பரபரப்பு தீர்ப்பு

பீஜிங், கிழக்கு சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தின் கிங்டாவோவில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் உற்பத்தி மேற்பார்வையாளராக லின் என்பவர் பணியாற்றினார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம், தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஷி என்ற பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அலுவலகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அலுவலகப் படிக்கட்டுகளில் லின், தனது சக ஊழியரான ஷியை கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தன. இருப்பினும் தன் மீதான … Read more

ஆபரேஷன் சிந்தூர் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அடையாளம் காணப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதத்தின் பக்கம் நிற்பது என்பது நீண்டகாலமாக தொடர்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சிட்டிசன் கூட்டமைப்பு சார்பில் ‘போர்க்களம் முதல் சாதூர்யம் வரை – ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதில் துணிச்சல், தேசிய பாதுகாப்பு, தூதரக ரீதியிலான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சுதந்திர போராட்டத்துக்கு பிறகு படைகளை அனுப்பி காஷ்மீரை ஆக்கிரமித்தது, அதைத்தொடர்ந்து … Read more

‘பாகிஸ்தான் பதிலுக்கு விரோதத்தை மட்டுமே கொடுக்கிறது’ – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

புதுடெல்லி: “இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சி மாநாடான ஷாங்க்ரி-லா உரையாடலில் பேசிய இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், “இந்தியா – பாகிஸ்தான் உறவில், நாங்கள் மூலோபாயம் இல்லாமல் செயல்படவில்லை. நாம் சுதந்திரம் பெற்றபோது, ​​சமூக, பொருளாதார, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என ஒவ்வொரு அளவீட்டிலும் பாகிஸ்தான் நம்மை … Read more

பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை; தாய்லாந்து உலக அழகி ஓபல் சுசதா

ஐதராபாத், 72-வது மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் மே 10-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அதன் இறுதிச்சுற்று ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசும், உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்களும் மேற்கொண்டனர். இதில், தாய்லாந்து அழகி ஓபல் சுசதா சுவாங்ஸ்ரீ வெற்றி பெற்றார். அவருக்கு, கடந்த ஆண்டு போட்டியில் கலந்து கொண்டு 71-வது … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: டாமி பால் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டாமி பால் (அமெரிக்கா), ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டாமி பால் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அலெக்ஸி பாபிரினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி … Read more

உக்ரைன் முதன்முறையாக தீவிர தாக்குதல்… ரஷியாவின் 40 விமானங்கள் அழிப்பு

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் … Read more

PBKS vs MI: 'மும்பைக்குத் தோல்வியைத் தந்த 3 முடிவுகள்!'- இறுதிப்போட்டிக்கு எப்படி சென்றது பஞ்சாப்?

‘பஞ்சாப் வெற்றி!’ தலைவனாக முன் நின்று பஞ்சாபை வழிநடத்தி சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரேயஸ் ஐயர். ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்த மும்பை அணி சின்னச்சின்ன தவறுகளைச் செய்து சறுக்கி தோற்றிருக்கிறது. மும்பை செய்த தவறுகள் என்னென்ன? பஞ்சாப் எப்படி வென்றது? Shreyas Iyer பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்தான் டாஸை வென்றிருந்தார். மழை வருவதைப்போல இருப்பதால் சேஸிங் செய்யப்போவதாக அறிவித்தார். Rohit Sharma மும்பை அணி … Read more

மரபணு திருத்தப்பட்ட விதைகளை டெல்டாவில் அனுமதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது: பி.ஆர்.பாண்டியன்

மரபணு திருத்தப்பட்ட விதைகளுக்கு, காவிரி டெல்டா பகுதியில் அனுமதி அளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மரபணு மாற்று தொழில்நுட்பத்தை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்துக்கு நிரந்தர தடை … Read more