லக்னோ: உ.பி.யில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பின்பற்றி வருகிறது.
வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காக ‘ஆபரேஷன் கன்விக் ஷன்’ நடவடிக்கையை கடந்த 2023, ஜூலை 1-ம் தொடங்கியது. இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.
‘ஆபரேஷன் கன்விக் ஷன்’ நடவடிக்கையில் கடந்த 2 ஆண்டுகளில் 97,158 கிரிமினல்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 68 பேருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையும் அடங்கும்.