மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: நீட் தேர்​வின்​போது மின்​தடை ஏற்​பட்​ட​தால் மறு​தேர்வு நடத்த வேண்​டும் என்று கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

இளங்​கலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அன்று சென்​னை​யில் பெய்த கனமழை காரண​மாக ஆவடி மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் மின்​தடை ஏற்​பட்​டது. இதன் காரண​மாக, தங்​களால் சரி​யாக தேர்வு எழுத முடி​யாத​தால், மறு​தேர்வு நடத்த உத்​தர​விட வேண்​டும் என்று கோரி, ஆவடி கேந்​திரிய வித்​யாலயா பள்ளி மையத்​தில் தேர்வு எழு​திய 13 பேர், பிற மையங்​களில் தேர்வு எழு​திய 3 பேர் என மொத்​தம் 16 பேர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்​கில் தேசிய தேர்வு முகமை தரப்​பில், ‘மின்​தடை ஏற்​பட்​டாலும், நீட் தேர்வு எழு​திய மாணவர்​கள் யாரும் பாதிக்​கப்​பட​வில்​லை. பெரும்​பாலான மாணவர்​கள் எல்லா கேள்வி​களுக்​கும் பதில் அளித்​துள்​ளனர். மறுதேர்வு நடத்​தி​னால், நாடு முழு​வதும் நீட் தேர்வு எழு​திய லட்​சக்​கணக்​கான மாணவர்​கள் பாதிக்​கப்​படு​வார்​கள்’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, ‘‘நாடு முழு​வதும் சுமார் 22 லட்​சம் பேர் நீட் தேர்வு எழு​திய நிலை​யில், மறு​தேர்வு நடத்​து​வது சாத்​தி​யமற்​றது’’ என்று கூறி வழக்​கு​களை தள்​ளு​படி செய்​தார். இந்த உத்​தரவை எதிர்த்​து, 16 மாணவர்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. நீதிப​தி​கள் ஜெ.நிஷா​பானு, எம்​.ஜோ​தி​ராமன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணை நடந்​தது. அப்​போது தேசிய தேர்வு முகமை தரப்​பில், ‘வழக்கு தொடர்ந்த பெரும்​பாலான மாணவர்​கள் 180 கேள்வி​களுக்கு100 கேள்வி​களுக்கு மேல் பதில் அளித்​துள்​ளனர். ஒரு மாணவர் 179 கேள்வி​களுக்கு விடையளித்​துள்​ளார். மின்​தடை​யால் இந்த மாணவர்​களுக்கு எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து, நீதிப​தி​கள், ‘‘நீட் தேர்​வில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக நிரூபிக்​காத வரை மறு​தேர்வு நடத்த உத்​தர​விட முடி​யாது. மறு​தேர்வு நடத்த உத்​தர​விட்​டால் அது மற்ற மாணவர்​களுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும். எனவே, மனு​தா​ரர்​களின் கோரிக்​கையை ஏற்க முடி​யாது என்ற தனி நீதிப​தி​யின் உத்​தரவு உறுதி செய்​யப்​படு​கிறது’’ என்று தீர்ப்​பளித்​து, மேல்​முறை​யீட்​டு மனுவை தள்​ளுபடி செய்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.