‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்

சென்னை: அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை மக்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமை சிதம்​பரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்​கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விடு​பட்​ட​வர்​கள் இதில் விண்​ணப்​பிக்​கு​மாறு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: மக்​களின் குறை​களை நேரடி​யாக கேட்​டறி​யும் திட்​டம் தொடங்​கப்​படும் என்று சட்​டப்​பேரவை கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, தமிழகத்​தில் உள்ள அனைத்து நகர்ப்​புற, ஊரக பகு​தி​களில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டம் தொடங்​கப்​படு​கிறது. தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கு​வது​தான் இதன் நோக்​கம்.

இத்​திட்​டத்​தின்​கீழ் நகர்ப்​புறங்​களில் 3,768 முகாம்​கள், ஊரகப் பகு​தி​களில் 6,232 முகாம்​கள் என 10 ஆயிரம் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும். இதில் முதல் முகாமை, கடலூர் மாவட்​டம் சிதம்​பரம் நகராட்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்​கிறார். அதை தொடர்ந்​து, அனைத்து மாவட்​டங்​களி​லும் நவம்​பர் வரை முகாம் நடை​பெறும்.

நகர்ப்​புறங்​களில் 13 துறை​களை சார்ந்த 43 சேவை​களும், ஊரகப் பகு​தி​களில் 15 துறை​களை சார்ந்த 46 சேவை​களும் வழங்​கப்​படும். அத்​துடன், மருத்​துவ முகாம்​களும் நடத்​தப்​படும். மேலும், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகு​தி​யுள்ள விடு​பட்ட பெண்​கள் இருந்​தால், முகாம் நடை​பெறும் நாளில் அங்கு சென்று விண்​ணப்​பத்தை அளிக்​கலாம். மகளிர் உரிமை தொகை திட்​டத்​துக்​கான விண்​ணப்​பம் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் மட்​டுமே வழங்​கப்​படும். இந்த முகாம்​களில் பெறப்​படும் விண்​ணப்​பங்​கள் மீது 45 நாட்​களில் உரிய நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

முகாம் நடை​பெறும் நாள், இடம்குறித்த விவரங்​கள், அங்கு வழங்​கப்​படும் அரசு துறை​களின் திட்​டங்​கள், சேவை​கள், அதில் பயனடைவதற்​கான தகு​தி​கள், தேவைப்​படும் ஆவணங்​கள் குறித்து தன்​னார்​வலர்​கள் வீடு வீடாக சென்​று, தெரி​விப்​பார்​கள். தகவல் கையேடு, விண்​ணப்​பத்​தை​யும் வழங்​கு​வார்கள். இந்த பணி ஜூலை 7-ம் தேதி (நாளை) தொடங்க உள்​ளது. 3 மாதங்​கள் தொடர்ச்​சி​யாக நடைபெறும் இப்​பணி​யில் ஒரு லட்​சம் தன்​னார்​வலர்​கள் ஈடு​படுகின்றனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான விதி​களில் சில தளர்​வு​கள் அளிக்​கப்​பட்டு சமீபத்​தில் அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, அரசுத் துறை​களில் சிறப்பு கால​முறை ஊதி​யம் பெற்று தற்​போது ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களை சேர்ந்த ஓய்​வூ​தி​யர் அல்​லாத பெண்​கள் விண்​ணப்​பிக்​கலாம். அரசுத் துறை​களில் மானி​யம் பெற்று நான்​கு சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களை சேர்ந்த பெண்​களும் உரிமைத் தொகை பெற தகு​தி​யானவர்​கள்.

அதே​போல, இந்​திரா காந்தி தேசிய விதவை ஓய்​வூ​தி​யம், ஆதர​வற்ற விதவை​கள் ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களில் ஓய்​வூ​தி​யம் பெறாத பெண்​கள் விண்​ணப்​பிக்​கலாம். கணவ​னால் கைவிடப்​பட்ட, 50 வயதுக்கு மேலாகி​யும் திரு​மண​மா​காத பெண்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களில்​ மற்​ற பெண்​கள்​ விண்​ணப்​பிக்​கலாம்​ என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.