பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தலைமறைவான பிஎஃப்ஐ நிர்வாகி விமான நிலையத்தில் கைது: என்ஐஏ நடவடிக்கை

பெங்களூரு: கர்​நாட​கா​வில் பாஜக நிர்​வாகி பிர​வீன் நெட்​டூரு கொல்​லப்​பட்ட வழக்​கில் தலைமறை​வாக இருந்த அப்​துல் ரஹ்​மானை தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) அதி​காரி​கள் கேரளா​வில் உள்ள கண்​ணூர் விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர்.

கர்​நாடக மாநிலம் தக்​ஷின கன்​னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செய​லா​ளர் பிர​வீன் நெட்​டூரு (28) கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்​களால் அடித்​துக் கொல்​லப்​பட்​டார். தேசிய புல​னாய்வு முகமை வழக்​குப்​ப​திவு செய்​து, 14 பேரை கைது செய்​தனர். இவ்​வழக்​கின் முக்​கிய குற்​ற​வாளி​கள் 6 பேர் தலைமறை​வாக இருந்​த​தால் அவர்​களை தேடி வந்​தனர். கர்​நாடகா மட்​டுமல்​லாமல் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்​களி​லும் தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். இந்​நிலை​யில் நேற்று முன் தினம் இரவு கேரள மாநிலம் கண்​ணூரில் உள்ள விமான நிலை​யத்​தில் தலைமறை​வாக இருந்த அப்​துல் ரஹ்​மானை கைது செய்​தனர்.

14 பேரிடம் விசாரணை: தேசிய புல​னாய்வு முகமை அதி​காரி​கள் வட்​டாரத்​தில் விசா​ரித்த போது, ”பிர​வீன் நெட்​டூரு கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள 14 பேரிடம் நடத்​திய விசா​ரணை​யின் அடிப்​படை​யில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 6 பேரை தேடி வந்​தோம். அவர்​களைப் பற்றி தகவல் கொடுத்​தால் ரூ.4 லட்​சம் சன்​மான​மாக வழங்​கப்​படும் என அறி​வித்து இருந்​தோம்.

இந்த வழக்​கில் நேரடி​யாக தொடர்​புடைய அப்​துல் ரஹ்​மான் கத்​தா​ரில் தலைமறை​வாக இருந்​தார். வியாழக்​கிழமை இரவு அவர் நாடு திரும்​புவ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் கண்​ணூர் விமான நிலை​யத்​தில் அப்​துல் ரஹ்​மானை கைது செய்​திருக்​கிறோம்.

அவரை காவலில் எடுத்து விசா​ரித்​து, இன்​னும் தலைமறை​வாக உள்ள முக்​கிய குற்​ற​வாளி​கள் 5 பேரை பிடிக்க முயற்சி மேற்​கொள்​வோம். அவர்​கள் வெளி​நாட்​டில் தலைமறை​வாக இருப்பதாக தகவல் கிடைத்​துள்​ளது. ச‌ர்​வ​தேச போலீ​ஸாரின் உதவி​யுடன் பிடிக்க முயற்​சித்​து வரு​கிறோம்​” என தெரி​வித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.