ஆசியாவின் மிக வயதான யானையான ‘வத்சலா’, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நேற்று (08) உயிரிழந்தது. 100 வயதைக் கடந்ததாக மதிப்பிடப்பட்ட இந்த யானை சமீப காலமாக பார்வையை இழந்ததால் அதனால் நீண்ட தூரம் நடக்கமுடியாமல் இருந்தது. இந்நிலையில், வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, காப்புக்காட்டின் ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் வடிகால் அருகே எழுந்து நடக்க இயலாமல் படுத்துக் கொண்டது. வனத்துறை ஊழியர்கள் இந்த யானையை தூக்க […]
