திடீர் மரணம் ஏற்பட்டால் பிரேத பரிசோதனை கட்டாயம்: கர்நாடக சுகாதார அமைச்சர் தகவல்

பெங்களூரு: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இதே​போல கதக் மாவட்​டத்​தி​லும் 20-க்​கும் மேற்​பட்​டோர் திடீர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து ஆய்வு செய்​வதற்​காக கர்​நாடக அரசு 10 மருத்​து​வர்​கள் அடங்​கிய நிபுணர் குழுவை அமைத்​தது. மருத்​து​வ நிபுணர் குழு சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் தினேஷ் குண்​டு​ரா​விடம் ஆய்​வறிக்​கையை சமர்ப்​பித்​தது.

அதனை பெற்​றுக்​கொண்ட பின்​னர்​,​ தினேஷ் குண்டு ராவ் கூறிய​தாவது: கரோனா தொற்று பரவலுக்கு பிறகு மாரடைப்​பு​கள் சற்று உயர்ந்​துள்​ளதை அறிக்கை உறுதி செய்​துள்​ளது. அதேவேளை​யில் கரோனா தடுப்​பூசி​யால் இந்த பாதிப்பு ஏற்​பட​வில்லை என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

கரோனா தொற்​றுக்கு ஆளான நபர்​களுக்கு நீரிழி​வு, ரத்த அழுத்த நோய் தாக்​கம் அதி​கரித்​துள்​ளது. திடீர் மாரடைப்​புக்கு இது​வும் ஒரு காரணம் என்று அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

இளம்​வயது மாரடைப்பு மரணங்​களை தடுக்க மருத்​து​வ​மனை தவிர பிற இடங்​களில் மாரடைப்பு காரண​மாக உயி​ரிழந்​தால் கட்​டா​யம் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்​டும். அப்​போது தான் உயி​ரிழப்​புக்கு சரி​யான காரணம் என்ன என்​பது தெரிய​வரும். அதனால் அந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு தினேஷ் குண்​டு​ராவ்​ தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.