சத்தீஸ்கரில் 9 பெண்கள் உட்பட 23 நக்சலைட்கள் சரண்

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தில் 9 பெண்​கள் உட்பட 23 நக்​சலைட்​கள் நேற்று அதி​காரி​கள் முன்​னிலை​யில் சரண் அடைந்​தனர்.

இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கிரண் சவாண் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சுக்​மா​வில் 3 தம்​ப​தி​கள் உட்பட 23 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர். இவர்​களை பற்​றிய தகவலுக்கு அரசால் மொத்​தம் ரூ.1.18 கோடி வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இவர்​களில் பெரும்​பாலானோர் மாவோ​யிஸ்ட்​களின் வலிமை மிகுந்த அமைப்​பான மக்​கள் விடு​தலை கொரில்லா படை​யின் (பிஎல்​ஜிஏ) 1-வது படைப் பிரிவை சேர்ந்​தவர்​கள்.

வெற்று மாவோ​யிஸ்ட் சித்​தாந்​தம், அப்​பாவி பழங்​குடி​யினர் மீது நக்​சலைட்​கள் செய்த அட்​டூழி​யங்​கள், அமைப்​புக்​குள் நில​வும் கருத்து வேறு​பாடு​கள் ஆகிய​வற்​றால் ஏமாற்​றம் அடைந்​த​தாக அவர்​கள் தெரி​வித்​தனர். சரண் அடைந்​தவர்​களில் 9 பெண்​களும் அடங்​கு​வர். பிஎல்​ஜிஏ நக்​சலைட் அமைப்பு தொடர்ந்து பலவீனம் அடைந்து வரு​கிறது. சுக்​மா-பீஜப்​பூர் எல்​லை​யில் தீவிர நடவடிக்கை காரண​மாக தொடர்ந்து பலர் சரண் அடைந்து வரு​கின்​றனர். சரண் அடைந்த அனை​வருக்​கும் தலா ரூ.50 ஆயிரம் நிதி​யுதவி வழங்​கப்​பட்​டது. மேலும் அரசு கொள்​கை​யின்​படி அவர்​களுக்கு மறு​வாழ்வு அளிக்​கப்பட உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

சத்​தீஸ்​கரின் அபுஜ்மத் பகு​தி​யில் தீவிர​மாக செயல்​பட்டு 22 நக்​சலைட்​கள் நாராயண்​பூர் மாவட்​டத்​தில் நேற்று முன்​தினம் சரண் அடைந்​தனர். இவர்​களை பற்​றிய தகவலுக்கு அரசால் மொத்​தம் ரூ.37.5 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.