141 பொறி​யியல் கல்​லூரி​களுக்கு அண்ணா பல்​கலை. நோட்டீஸ்

சென்னை: முழு​மை​யான கட்​டமைப்பு வசதி​கள் இல்​லாத​தால் 141 பொறி​யியல் கல்​லூரி​களுக்கு விளக்​கம் கேட்டு அண்ணா கலைக்​கழகம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ள​தாக தகவல் கிடைத்​துள்​ளது. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் 460-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த கல்​லூரி​கள் ஆண்​டு​ தோறும் தங்​களின் இணைப்பு அங்​கீ​காரத்தை அகில இந்​திய தொழில்​நுட்ப கல்விக் குழு​மம் (ஏஐசிடிஇ) மற்​றும் அண்ணா பல்​கலைக்​கழகத்​திடம் புதுப்​பித்​துக் கொள்ள வேண்டும்.

அந்​தவகை​யில் நடப்பு கல்​வி​யாண்டு (2025-26) அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் இணைப்பு அங்​கீ​காரம் கோரி விண்​ணப்​பித்த கல்லூரி​களின் கட்​டமைப்பு வசதி​கள், ஆவணங்​கள் சரி​பார்ப்பு உட்பட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் விதி​முறை​களை பூர்த்தி செய்​யாத 141 கல்​லூரி​களுக்கு விளக்​கம் நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

இதுகுறித்து அண்ணா பல்​கலைக்​கழக அதி​காரி​கள் சிலர் கூறும்​போது, “141 கல்லூரிகளில் பேராசிரியர் பற்​றாக்​குறை, நூல​கங்​கள், ஆய்​வகங்​கள் குறை​பாடு போன்ற பல்​வேறு கட்​டமைப்பு வசதி​கள் முழு​மை​யாக இல்​லை. இந்த கல்​லூரி​கள் குறை​பாடு​களை 45 நாட்​களுக்​குள் சரி செய்ய வேண்​டும். அதைத் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்த பின்​னரே இணைப்பு அங்​கீ​காரம் உறுதி செய்யப்படும்” என்​றனர்.

இதனிடையே, பொறி​யியல் படிப்​பு​களுக்​கான பொதுப்​பிரிவு கலந்​தாய்வு இன்று தொடங்​கும் சூழலில், அண்ணா பல்​கலை.​யின் நடவடிக்​கை​யால் மாணவர்​கள், பெற்​றோர்​ கவலை​யில் ஆழ்ந்​துள்​ளனர். கல்​லூரி​யின் சேர்க்கை பெற்​றபின் அதற்​கான அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​பட்​டால் மாணவர்​களின் எதிர்​காலம் பாதிக்கும். எனவே, நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்ள சம்​மந்​தப்​பட்ட கல்​லூரி​களின் பட்​டியலை வெளி​யிட கல்​வி​யாளர்​கள் கோரியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.