டாக்கா,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் பாகிஸ்தான் அணி இந்த தொடரில் விளையாட உள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் வங்காளதேசம் எப்போதுமே சிறப்பாக விளையாடுவதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :