டெல்லி: இந்தியாவில் 10லட்சம் பேருக்கு இலவச ‘ஏஐ’ பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கத்தின் 10 ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்ட மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவில் 10லட்சம் பேருக்கு இலவசமாக செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்தார். தலைநகர் புதுடெல்லியில் உள்ள யாஷோபூமி மாநாட்டு நிலையத்தில் ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கத்தின் 10 ஆண்டு நிறைவு கொண்டாட்டம் நடைபெற்றது. […]
