விருதுநகர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் கலந்துகொண்டு கோவிந்தா… கோபாலா… கோஷத்துடன் தேரின் வடத்தை பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் சய்தனர். 108 வைணவ திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இன்று ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரம் விழா அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவையொட்டி, 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா ஜூலை 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி […]
