டெஸ்ட் கிரிக்கெட்: கேப்டனாக அறிமுகம் ஆன முதல் தொடரிலேயே மாபெரும் சாதனை படைத்த கில்

மான்செஸ்டர்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர்.

311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிமுகம் ஆன சுப்மன் கில் இதுவரை 4 சதம் உள்பட 722 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அறிமுகம் ஆன முதல் தொடரிலேயே அதிக ரன் குவித்த 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையில் 810 ரன்களுடன் டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:

1. டான் பிராட்மேன் – 810 ரன்கள்

2. சுப்மன் கில் – 722 ரன்கள்*

3. கிரெக் சேப்பல் – 702 ரன்கள்

4. கிளைவ் லாயிட் – 636 ரன்கள்

5. பீட்டர் மே – 582 ரன்கள்

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.