ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI ) ஏற்பாடு செய்த புதுயுக ராணுவ தொழில்நுட்பங்கள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் ஆர் சிங், “இந்தியா ஒரு எல்லையில் (பாகிஸ்தான் எல்லை) இரண்டு எதிரிகளை (பாகிஸ்தான், சீனா) கொண்டுள்ளது. உண்மையில் மூன்று எதிரிகள் (பாகிஸ்தான், சீனா, … Read more

உக்ரைன் மீது ஒரே இரவில் 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்

கீவ்: உக்ரைன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலில் கீவ் நகரில் மட்டும் 23 பேர் படுகாடமடைந்தனர். ஒருபக்கம் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் … Read more

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு

லவ் மேரேஜ் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவில் படக் குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 

பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது – விஜய் உறுதி!

திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல்!

இந்திய டெஸ்ட் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் முதல் இன்னிங்ஸில் 269  ரன்கள் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் கேப்டனாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். குறிப்பாக ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.   இந்த நிலையில்,டெஸ்ட் கிரிக்கெட் … Read more

Amazon Prime Day 2025: ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் நம்ப முடியாத சலுகைகள்

Amazon Prime Day 2025: அமேசான் பிரைம் டே 2025 ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது. இந்த தளம் ஏற்கனவே சில சிறந்த சலுகைகளை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் பிற பொருட்களுக்கான ப்ரீ-டீல்களை வாடிக்கையாளர்கள் கண்டனர். இப்போது, ​​அமேசான் இன்னும் சில ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கான தள்ளுபடிகளை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த விற்பனை மிகப்பெரிய தள்ளுபடிகளை கொண்டிருக்கும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்ய பல … Read more

தலைக்கு வந்தது… ஓட்டுநர் இருக்கையை கீழே இறக்கியதால் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பிய நபர்…

மலேசியாவின் பினாங்கு பகுதியில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து பினாங்கு காவல்துறை கூறியுள்ளதாவது, “பினாங்கின் சுங்கை நியோரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு வெளியே செவ்வாய்க்கிழமையன்று தனது குழந்தையை அழைத்துச் செல்ல ஒருவர் காரில் வந்துள்ளார். குழந்தை வரும் வரை ஓட்டுநர் இருக்கையை சற்று சாய்த்து அமர்ந்திருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் அங்கு வேகமாக வந்த இரண்டு இளைஞர்களைக் கண்டதும் தனது காரின் இருக்கையை மேலும் சாய்த்து … Read more

"விஜய் அண்ணா; உங்களை நம்பித்தான்" கந்துவட்டி கொடுமையால் த.வெ.க. பிரமுகர் தற்கொலை! உருக்கமான கடிதம்

புதுச்சேரி, புதுச்சேரி கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்ரம். (வயது 34.) த.வெ.க. பிரமுகரான இவர் கறிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் மினிலாரி ஒன்றை விலைக்கு வாங்கினார். இதற்காக பல இடங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்ரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் … Read more

உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக்: யுவராஜ் சிங் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி

மும்பை, ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த சீசன் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம், நார்தாம்டன், லெய்செஸ்டர் மற்றும் லீட்ஸ் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். … Read more

அமெரிக்கா: நைட் கிளப்புக்கு வெளியே துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

சிகாகோ, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ரிவர் நார்த் பகுதியில் உணவு விடுதிகள் மற்றும் பார்களுடன் கூடிய நைட் கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நைட் கிளப் ஒன்றுக்கு வெளியே திரண்டிருந்த மக்களை நோக்கி நேற்றிரவு சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதன்பின்பு, வாகனத்தில் வந்த அந்நபர்கள் உடனடியாக தப்பி விட்டனர். இதனை தொடர்ந்து தெருவெல்லாம் அழுகுரலாகவும், ரத்தம் வழிந்தோட மக்கள் அலறியபடியும் நாலாபுறமும் ஓடினர். சிலர், யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என தேடினர். அவர்களில் … Read more