ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது ஜன்னல் சட்டம் தளர்ந்தது… பயணிகள் பீதி…

கோவா-புனே இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டம் தளர்ந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். கோவாவிலிருந்து இன்று புனேவுக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இருந்தபோதிலும், பயணம் முழுவதும் கேபினில் அழுத்தம் சீராக இருந்தது என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவொரு காயமோ அல்லது பெரிய பிரச்சினைகளோ இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய கோகோ காப்

லண்டன், ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீராங்கனையான கோகோ … Read more

Vijay : 'கொடூரமா இருக்கு… இப்படி நடக்கவே கூடாது!' – அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதரரிடமும் விஜய் எமோஷனலாக பேசியிருக்கிறார். விஜய் தவெக சார்பில் அஜித்தின் காவல் மரணத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். வருகிற 6 ஆம் தேதி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர். இந்நிலையில்தான், தவெக தலைவர் விஜய் சிவகங்கைக்கு நேரில் சென்று உயிரிழந்த அஜித் … Read more

“நாங்கள் துணை நிற்போம்…” – அஜித்குமாரின் தாய், தம்பியிடம் போனில் பழனிசாமி ஆறுதல்

சென்னை: “துரதிருஷ்டவசமாக சில மனித மிருகங்கள் வந்து கடுமையாக தாக்கியதால், உங்களுடைய மகன் அஜித்குமார் மரணமடைந்துவிட்டார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்” என்று அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரிடம் தொலைபேசி வாயிலாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆறுதலாக பேசினார். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று (ஜூலை 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அதிமுக … Read more

புதிய குற்றவியல் சட்டங்கள் ‘குழப்பம் தரும் வீண் வேலை’ – ப.சிதம்பரம் முன்வைக்கும் காரணம்

புதுடெல்லி: ‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது வீண் வேலை. இந்த புதிய சட்டங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினரிடையே நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுதந்திரத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்தங்களே மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் என்று மத்திய அரசு பலமுறை கூறி வருகிறது. ஆனால் உண்மையிலிருந்து … Read more

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய எங்களது ஒப்புதல் அவசியம்: சீன அரசு திட்டவட்டம்

பீஜிங்: அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதற்கும், அங்கீகரிப்பதற்குமான பொறுப்பு காடன் போட்ராங் அறக்கட்டளை உறுப்பினர்களையே சாரும் என தலாய் லாமா இன்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் நடைமுறையில் தங்களது ஒப்புதலைப் பெறுவது முக்கியம் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பீஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் … Read more

ஜனவரி முதல் ஜூன் வரை! இந்தியாவில் நடந்த முக்கியமான 10 செய்திகள்!

2025 தொடங்கி கிட்டத்தட்ட 6 மாதங்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை இந்தியாவில் என்னென்ன அரசியல் நிகழ்வுகள் நடந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அஜித்குமாரின் தாயாரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல்.. ரூ. 2 லட்சம் நிவாரணம்!

காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் இல்லத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இந்தியாவில் உரப் பற்றாக்குறை நிலவுகிறது பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

யூரியா, டிஏபி உள்ளிட்ட அத்தியாவசிய உரங்கள் பற்றாக்குறையை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். “ஒருபுறம், பிரதமர் நரேந்திர மோடி உரப் பைகளில் தனது புகைப்படத்தை அச்சிடுகிறார், மறுபுறம், விவசாயிகள் ‘சீனாவில் தயாரிக்கப்பட்ட’ உரங்களைச் சார்ந்து இருக்கிறார்கள்,” என்று அவர் கேலி செய்தார். “இந்தியா ஒரு விவசாய … Read more

சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? டிகே சிவக்குமார் விளக்கம்

பெங்களூரு, கர்நாடக காங்கிரசில் குழப்பமான சூழல் நிலவு கிறது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று முன்தினம் பெங்களூரு வந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அழைத்து தனித்தனியாக பேசினார். அதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய மாநில நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்பதாக அறிவித்தார். அதன்படி நேற்று 2-வது நாளாக அவர் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அதாவது … Read more