நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை

பெங்களூரு: ​முன்​னாள் எம்​பி​யும் நடிகை​யு​மான ரம்​யா​வுக்கு சமூக வலை​தளங்​களில் ஆபாச குறுஞ்​செய்​தி​யும் பலாத்​கார மிரட்​டலும் விடுத்த 4 பேரை பெங்​களூரு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். மேலும் 10-க்​கும் மேற்​பட்​டோரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

கன்னட நடிகர் தர்​ஷன் தனது காதலி பவித்ரா கவு​டாவுக்கு ஆபாச குறுஞ்​செய்தி அனுப்​பிய ரேணுகா சாமி என்ற ரசிகரை அடித்து கொலை செய்த வழக்​கில் கடந்த ஆண்டு கைதா​னார். அவருக்கு இரு மாதங்​களுக்கு முன்பு கர்​நாடக உயர்​ நீ​தி​மன்​றம் ஜாமீன் வழங்​கியது. இதற்கு உச்​ச நீ​தி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​தது.

இதுகுறித்து கன்னட திரைப்பட நடிகை​யும் முன்​னாள் எம்​பி​யு​மான ரம்​யா, ‘‘கொல்​லப்​பட்ட‌ ரேணுகா சாமி​யின் குடும்​பத்​ துக்கு நீதி கிடைக்க வேண்​டும்​’’ என சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டார். இதனால் ஆத்​திரமடைந்த நடிகர் தர்​ஷனின் ரசிகர்​கள் அவருக்கு சமூக வலை​தளங்​களில் ஆபாச குறுஞ்​செய்​தி​ அனுப்பியும், பலாத்​கார மிரட்​டலும் விடுத்​த‌னர். இதுகுறித்து பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ரம்யா புகார் அளித்​தார்.

இதையடுத்து பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த்குமார் சிங் தலை​மையி​லான போலீ​ஸார் ரம்​யா​வுக்கு மிரட்​டல் விடுத்தநபர்​களை தேடி வந்​தனர். அவர்​களின் இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தின் வாயி​லாக கண்​டறிந்​து, பவன் கவு​டா, ராஜேஷ், கங்​காத​ரா, ஒப்​பன்னா ஆகிய 4 பேரை நேற்றுகைது செய்​தனர். இதுகுறித்து காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் கூறுகை​யில், ‘‘முன்​னாள் எம்பி ரம்​யா​வுக்கு மிரட்​டல் விடுத்த 4 பேரை கைது செய்​திருக்​கிறோம். இன்​னும் 11 பேரின் அடை​யாளம், முகவரி ஆகிய​வற்றை கண்​டறிந்​திருக்​கிறோம். விரை​வில் அவர்​களை​யும்​ கைது செய்​வோம்​” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.