ஆபரேஷன் சிந்தூர் ஆச்சரியங்கள் நிறைந்தது: அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் புகழாரம்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்​தவை என்று அமெரிக்க பாது​காப்பு நிபுணர் ஜான் ஸ்பென்​சர் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தனி​யார் தொலைக்​காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் அரசி​யல் தலைமை, ராணுவத்​துக்கு இடையே மிக நெருங்​கிய ஒத்​துழைப்பு நில​வு​கிறது. ஆபரேஷன் சிந்தூர் போரின்​போது தரை, வான், கடல் பரப்பு என அனைத்து தளங்​களி​லும் இந்​தி​யா​வின் முப்​படைகளும் ஒருங்​கிணைந்து செயல்​பட்​டன.

இது மிக​வும் அபூர்​வ​மானது. ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரி​யங்​கள் நிறைந்​தவை. இவ்​வாறு ஜான் ஸ்பென்​சர் தெரி​வித்​தார். மத்​திய பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் வளர்ச்சி அமைப்​பின் (டிஆர்​டிஓ) தலை​வர் சமீர் காமத், புனே​வில்கூறிய​தாவது: ஆபரேஷன் சிந்​தூரின்​போது இந்​தி​யா​வின் உள்​நாட்டு தொழில்​நுட்​பத்தை பார்த்து உலக நாடு​கள் வியப்​பில் ஆழ்ந்​தன.

செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​துடன்​கூடிய ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கவசம், பாகிஸ்​தான் ட்ரோன்​களை நடு​வானில் துல்​லிய​மாக தாக்கி அழித்​தது. பிரம்​மோஸ் ஏவு​கணை​கள் பாகிஸ்​தான் விமான படைத் தளங்​களை துவம்​சம் செய்​தன. இவ்​வாறு டிஆர்​டிஓ தலை​வர் சமீர் காமத் தெரி​வித்​தார்.

சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது: ரஷ்ய தயாரிப்​பான எஸ்​-400 ஏவு​கணை​கள் மூலம் சுமார் 300 கி.மீ. தொலை​வில் பறந்து கொண்​டிருந்த பாகிஸ்​தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது. இவ்​வளவு தொலை​வில் பறந்த விமானத்தை சுட்டு வீழ்த்​தி​யது, உலக வரலாற்​றில் இதுவே முதல்​முறை ஆகும். பாகிஸ்​தான் ட்ரோன்​கள், ஏவு​கணை​களால்​ இந்​தி​ய எல்​லை​யை தாண்​ட முடிய​வில்​லை. இவ்​வாறு சர்​வ​தேச பாது​காப்​பு நிபுணர்​கள்​ தெரிவித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.