கா​விரி​யில் வெள்​ளப்பெருக்கு அதிகரிப்பு: கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: காவிரி​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதை அடுத்து மேட்​டூர் அணை​யில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இது மேலும் அதி​கரிக்​கப்​படும் என்​ப​தால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. நடப்​பாண்​டில் முதல்முறை​யாக, மேட்​டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்​பியது. டெல்டா பாசனத்​துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நீர் திறப்பு காரணமாக, அணை​யின் நீர் மட்​டம் குறைவதும், காவிரி​யில் வெள்​ளம் ஏற்​படும்​போது, அணை மீண்​டும் நிரம்​புவது​மாக இருந்து வரு​கிறது. இந்​நிலை​யில், அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 6,223 கனஅடி​யாக இருந்த நீர்வரத்து நேற்று காலை​யில் 7,382 கனஅடி​யாக அதி​கரித்​தது. பாசனத்​துக்​காக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வந்​தது.

இதற்​கிடையே, காவிரி நீர்​பிடிப்​புப் பகு​தி​களில் கனமழை பெய்து வரு​வ​தால், கர்​நாட​கா​வின் கபினி​யில் இருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீத​மும், கேஆர்​எஸ் அணை​யில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனையடுத்​து, மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து நேற்று மாலை 4 மணிக்கு விநாடிக்கு 12 ஆயிரத்து 657 கனஅடி​யாக அதி​கரித்​தது.

அணைக்​கான நீர்​வரத்து வேக​மாக அதி​கரித்து வரு​வதால், முன்​னெச்​சரிக்கையாக, மேட்​டூர் அணை​யில் இருந்து மாலை 4 மணிக்கு 35 ஆயிரம் கனஅடி​யாக​வும், மாலை 6 மணிக்கு 50 ஆயிரம் கனஅடி​யாக​வும் நீர் திறப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, எந்​நேரத்​தி​லும் மேட்​டூர் அணை​யில் இருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்​ப​தால் சேலம், ஈரோடு, நாமக்​கல், கரூர் உள்பட காவிரி கரையோரத்​தில் உள்ள 11 மாவட்​டங்​களுக்கு நீர்​வளத்​துறை சார்​பில் வெள்ள எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.