‘காந்தி குடும்பத்தினரே எனது தெய்வம்’ – ஆர்எஸ்எஸ் பாடல் சர்ச்சைக்கு டி.கே.சிவகுமார் விளக்கம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பாடியது சர்ச்சையானது. இந்நிலையில், தன்னை காந்தி குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விஸ்வாசி என அவர் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார், ஆர்எஸ்எஸ் பாடல் சர்ச்சை மற்றும் தன் மீதான விமர்சனத்துக்கு விளக்கம் கொடுத்தார்.

“சில தினங்களுக்கு முன்னர் பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலின் மூன்று வாக்கியத்தை நான் பாடி இருந்தேன். அதன் மூலம் ஐபிஎல் போட்டி தொடர்பான பிரச்சினை சார்ந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசோகாவை பங்கேற்க செய்ய முயற்சித்தேன். ஏனெனில், எனது நண்பர்கள் சிலர் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.

நான் காங்கிரஸ் கட்சிக்காரனாக பிறந்தேன். அப்படியே தான் உயிர் பிரிவேன். காந்தி குடும்பத்தை யாரேனும் கேள்வி கேட்பதை அனுமதிக்க முடியாது. எனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனால், இதை அரசியல் அழுத்தம் காரணமாக செய்யவில்லை. எனது கட்சியின் சகாக்கள் சிலர் இது தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை நான் விரும்பவில்லை.

காந்தி குடும்பத்தினரே எனது தெய்வம். நான் அவர்களின் பக்தன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் எனது பயணம் மிகவும் நீண்டது. 100 காங்கிரஸ் பவனை நிறுவ உள்ளோம். அது எங்கள் கட்சியின் கோயில். நான் எனது கட்சியின் வரலாற்றில் நிலைத்திருக்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக எல்லோரும் இணைந்து பணியாற்றுவோம்” என அவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் பாடல்: அம்மாநில சட்​டப்​பேர​வை​யில் கடந்த 21-ம் தேதி பெங்​களூரு நெரிசல் மரணங்​கள் தொடர்​பான விவாதம் நடை​பெற்​றது. அப்​போது துணை முதல்​வர் டி.கே. சிவகு​மார் பேசுகை​யில், ‘‘நமஸ்தே சதா வத்​சலே மாத்​ருபூமே” என்ற ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பாடலை பாடி​னார்.

மேலும் அவர் பேசுகை​யில், “எ​திர்க்​கட்சி தலை​வர் ஆர்​.அசோகா​வும் நானும் ஒரு காலத்​தில் ஆர்​எஸ்​எஸ் சீருடை அணிந்து ஒன்​றாக செயல்​பட்​டோம். ஆனால் இப்​போது வேறு கட்​சிகளில் இருக்​கிறோம்​” என குறிப்​பிட்​டார்.

காங்​கிரஸ் தலை​வர் கார்​கே, ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் ஆர்​எஸ்​எஸ் அமைப்பை கடுமை​யாக விமர்​சித்​து​வரும் நிலை​யில், அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் அந்த அமைப்​பின் பாடலை பாடி​யிருப்​பது காங்​கிரஸ் வட்​டாரத்​தில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இது குறித்து பாஜக செய்​தித் தொடர்​பாளர் பிரதீப் பண்​டாரி, “டி.கே.சிவகு​மார் ஆர்​எஸ்​எஸ் பாடலை பாடும் வீடியோவை ராகுல் குடும்​பத்​தினர் பார்த்தால் கோமா நிலைக்கு சென்​று​விடு​வார்​கள். காங்​கிரஸ் தலை​வர்​கள் இடையே ஒரு​மித்த கருத்து இல்லை என இதன் மூலம் தெளி​வாகிறது’’ என கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.