கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு புகார்: டீன் பொறுப்பில் இருந்து சவுந்தரராஜன் நீக்கம்

சென்னை: சென்னை கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​யில் ரூ.5 கோடி முறை​கேடு செய்​த​தாக எழுந்த புகாரை தொடர்ந்​து, அக்​
கல்​லூரி​யின் டீன் பொறுப்​பில் இருந்து சவுந்​தர​ராஜன் நீக்​கப்​பட்​டுள்​ளார். தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்கலைக்கழகத்​தின் கீழ் சென்னை வேப்​பேரி​யில் சென்னை கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி செயல்​பட்டு வரு​கிறது.

இந்த கல்​லூரி​யின் டீனாக இருந்​தவர் மருத்​து​வர் சி.சவுந்​தர​ராஜன். இந்​நிலை​யில், பல்கலைக்கழகத்தில் உள்ள கால்​நடை நல கல்வி மையத்​தில் சுமார் ரூ.5 கோடி வரை டீன் சவுந்​தர​ராஜன் முறை​கேடு செய்​திருப்​ப​தாக, பல்​கலைக்​கழகத்​தின் நிர்​வாகத்​திடம் மையத்​தின் இயக்​குநர் புகார் அளித்​தார்.

அதன்​பேரில் முதல்​கட்ட விசா​ரணை நடத்​திய நிர்​வாகம், டீன் பொறுப்​பில் இருந்து சவுந்​தர​ராஜனை நீக்​கி​யுள்​ளது. மேலும், 5 அதி​காரி​கள் துறைக்​குள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டனர். முறை​கேடு குறித்து விசா​ரணை நடத்​து​வதற்​காக 3 பேர் கொண்ட குழுவை அமைத்​துள்ள பல்​கலைக்​கழக நிர்​வாகம், 15 நாட்​களுக்​குள் அறிக்கை சமர்ப்​பிக்​கு​மாறு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பல்​கலைக்​கழக நிர்​வாகி​களிடம் கேட்​ட​போது, “சென்னை கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி டீன் உட்பட யாரும் பணியிடை நீக்​கம் செய்​யப்​பட​வில்​லை. டீன் பொறுப்​பில் இருந்து சவுந்​தர​ராஜன் நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

அவர் கல்​லூரி​யில் பேராசிரிய​ராக தொடரு​வார். அதே​போல், 5 அதி​காரி​கள் துறைக்​குள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். விசா​ரணை நடத்த அமைக்​கப்​பட்​டுள்ள குழு, அறிக்கை சமர்ப்​பித்த பிறகே, அடுத்​தக்​கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றனர். இதற்​கிடையே, கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி டீனாக (பொறுப்​பு) மருத்​து​வர் எஸ்​.சதீஷ்கு​மார் நியமிக்​கப்​பட்​டுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.