இயற்கை பேரிடரிலும் 2 சாதனை படைத்த காஷ்மீர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘க​னமழை, நிலச்​சரிவு போன்ற இயற்கை பேரிடர்​கள், நமது நாட்டை சோதிக்​கின்​றன. இந்த இக்​கட்​டான நேரத்​தலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 சாதனை​களைப் படைத்​துள்​ளது’’ என்று மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 125-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி நேற்று பேசி​ய​தாவது:

பரு​வ​மழை​யின் இந்த வேளை​யில் இயற்​கைப் பேரிடர்​கள் நமது நாட்டை சோதித்து வரு​கின்​றன. கடந்த சில வாரங்​களில் கனமழை, வெள்​ளம், நிலச்​சரிவு ஆகிய​வற்​றின் பாதிப்பை பார்த்​தோம். சில இடங்​களில் வீடு​கள் மண்​ணில் புதைந்​தன. சில இடங்​களில் பயிர்​கள் நீரில் மூழ்​கின. பல குடும்​பங்​கள் நிலச்​சரி​வால் மண்​ணில் புதைந்​துள்​ளன. பாலங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன, சாலைகள் காணா​மல் போயின, மக்​களின் வாழ்க்கை பெரும் சங்​கடத்​தில் சிக்​கியது. இந்​தச் சங்​கடங்​கள் இந்​தி​யர்​கள் அனை​வரை​யும் சோகத்​தில் ஆழ்த்​தி​யது. தங்​களு​டைய உறவு​களை இழந்த குடும்​பங்​களின் துக்​கம் நம் அனை​வரின் துக்​கம்.

அதேவேளை​யில், கனமழை, வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட இடங்​களில் தேசிய பேரிடர் மீட்​புப் படை, மாநில பேரிடர் மீட்​புப் படை,பிற பாது​காப்​புப் படை வீரர்​கள், உள்​ளூர் மக்​கள், சமூக ஆர்​வலர்​கள், மருத்​து​வர்​கள், நிர்​வாகத்​தினர் என அனைத்து தரப்​பினரும் இரவு பகல் பார்க்​காமல் மீட்​பு, நிவாரணப் பணி​களில் பாடு​பட்​டனர். அவர்​கள் அனை​வருக்​கும் மனமார்ந்த நன்​றியை தெரி​வித்து கொள்​கிறேன்.

தெர்​மல் கேம​ராக்​கள், மண்​ணுக்​குள் புதைந்​தவர்​களை கண்​டறி​யும் கருவி​கள், மோப்ப நாய்​கள் மற்​றும் ட்ரோன்​கள் என பல நவீன கருவி​களின் உதவியோடு உடனுக்​குடன் நிவாரண பணி​களில் ஈடு​பட்​டனர். ஹெலி​காப்​டர்​கள் மூலம் நிவாரணப் பொருட்​கள் கொண்டு சேர்க்​கப்​பட்​டன, காயமடைந்​தவர்​கள் வான்​வழி கொண்டு செல்​லப்​பட்​டார்​கள். பேரிடர் நேரத்​தில் ராணுவத்​தின் உதவி​கள் மிகப்​பெரி​தாக இருந்​தது.

கனமழை, வெள்​ளம், நிலச்​சரிவுக்கு இடை​யிலும், ஜம்மு கஷ்மீரில் 2 சாதனை​கள் நிகழ்ந்​துள்​ளன. முதலா​வது ஜம்மு கஷ்மீரின் புல்​வா​மா​வில் முதல் பகல் – இரவு கிரிக்​கெட் போட்டி நடை​பெற்​றுள்​ளது.​ முன்​பெல்​லாம் இது​போன்ற விளை​யாட்​டுக்கு சாத்​தி​யமில்​லை. இப்​போது எனது நாடு மாறி வரு​கிறது. புல்​வா​மா​வில் நடை​பெற்ற கிரிக்​கெட் போட்​டி​யில் ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்​றனர்.

இரண்​டாவது கேலோ இந்​தியா நீர் விளை​யாட்​டு​கள் நகரின் தால் ஏரி​யில் நடை​பெற்​றது. இந்த விளை​யாட்​டு​களில் நாடு முழு​வதும் இருந்து 800-க்​கும் அதி​க​மான விளை​யாட்டு வீரர்​கள் பங்​கெடுத்​தனர். ஆண் வீரர்​களுக்கு இணை​யாக இதில் பெண் வீராங்​க​னை​களும் கலந்து கொண்​டனர்​ .அவர்​களுக்கு என் பாராட்​டு​களைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அடுத்த முறை நாம் சந்​திக்​கும்​ வேளை​யிலே, மேலும்​ புதி​ய விஷ​யங்​களோடு சந்​திப்​போம்​. இவ்​வாறு பிரதமர்​ நரேந்திர மோடி உரை​யாற்​றி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.