துஷான்பே,
8 அணிகள் பங்கேற்றுள்ள நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில்‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தஜிகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
இதனையடுத்து இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஈரானுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இந்தியா தனது கடைசி லீக்கில் 4-ந்தேதி ஆப்கானிஸ்தான் உடன் மோதுகிறது.
Related Tags :