தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு வாய்ப்பு

திருமலை: ​திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு சொந்​த​மான மருத்​து​வ​மனை​களில் சேவை புரிய பக்​தர்​களுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட உள்ளது.

திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் தேவஸ்​தான அறங்​காவலர் பி.ஆர். நாயுடு மற்​றும் நிர்​வாக அதி​காரி சியாமள ராவ் ஆகியோர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான மருத்​து​வ​மனை​களில் சேவை செய்ய விரும்​பும் பக்​தர்​களுக்கு ‘ஸ்ரீவாரி சேவா டிரைனர்’ எனும் பெயரில் 3 நாட்​கள் பயிற்சி அளிக்​கப்​படும்.

இந்த சேவை​யில் பங்​கேற்க விரும்​பும் பக்​தர்​கள் குறைந்​த​பட்​சம் பட்​டப்​படிப்பு படித்​திருக்க வேண்​டும். பயிற்சி அளிக்க சிலர் நியமனம் செய்​யப்​படு​வர். அதன் பின்​னர் பயிற்சி பெற்ற சேவகர்​கள், திருப்​ப​தி​யில் உள்ள சிம்​ஸ், பேர்ட் எனும் தேவஸ்​தான மருத்​து​வ​மனை​யில் சேவை புரிய அனு​ம​திக்​கப்​படு​வர். வெளி​நாடு வாழ் இந்​திய பக்​தர்​களும் இந்த சேவை​யில் ஈடு​படுத்​தப்​படு​வர்.

கடந்த ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் ஆட்​சி​யில் திரு​மலை​யில் ஓட்​டல்​களை நடத்த டெண்​டர் எடுத்​தவர்​கள் பக்​தர்​களுக்கு தரமில்லா உணவுப் பொருட்​களை அதிக விலைக்கு விற்​ற​தாக புகார் எழுந்​தது. எனவே, இம்​முறை மக்​களுக்கு நன்கு அறி​முக​மான தரமான ஓட்​டல்​களுக்கு முன்​னுரிமை வழங்​கப்​பட்​டுள்​ளது.

அடை​யார் ஆனந்த பவன் உள்​ளிட்ட பிரபல ஓட்​டல்​களுக்கு திரு​மலை​யில் அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இவர்​கள் மூலம் தரமான மற்​றும் ருசிகர​மான உணவுப் பொருட்​கள்​ வழங்​கப்​படும்​ என்​ற நம்​பிக்​கை எங்​களுக்​கு உள்​ளது. இவ்​​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.