India Playing XI vs Pakistan: அனைவரும் அதிகம் எதிர்பார்த்த ஆசியக் கோப்பைத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தனது அடுத்த போட்டியில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியின் மீது அனைவருக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணியும் தங்களது முதல் போட்டியில் ஓமன் அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இரண்டு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?
யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனின் பெரிய மாற்றம் இருந்தது. சுப்மன் கில் அணிக்குள் வந்துள்ளதால் சஞ்சு சாம்சன் இடம் பறிபோகமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் சஞ்சு சாம்சன் ஜித்தேஷ் சர்மாவின் இடத்தில் களமிறங்க இருந்தார். முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவரது பெயர் ஆறாவது இடத்தில் இருந்தது. மேலும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் உடன் இந்திய அணி களம் இறங்கியது. அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக சிவம் துபே அணியில இடம் பெற்றிருந்தார். மேலும் அக்சர் படேல், வரும் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று ஸ்பின்னர்கள் அணியில் இடம் பெற்று இருந்தனர். முக்கிய வேகப்பந்துவீச்சாளராக பும்ரா மட்டுமே இடம் பெற்று இருந்தார்.
டெத் ஓவர்களில் யார் வந்து வீசுவார்?
யுஏஇ அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு எளிதான வெற்றியை பெற்று தந்தாலும், முக்கியமான கட்டத்தில் டெத் ஓவர்களில் யார் பந்து வீசுவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்டியா மட்டுமே உள்ளார். பும்ரா டெத் அவர்களின் சிறப்பாக பந்து வீசுவார் என்றாலும் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஹர்திக் பாண்டியா தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்தாலும், ரன்களையும் வாரி வழங்குவார். இதனால் அர்ஷ்தீப் சிங் அணிக்குள் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபேவிற்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் பவர் பிளேயரில் விக்கெட் எடுக்கும் திறனை அர்ஷ்தீப் சிங் வைத்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அணியை ஆரம்பத்திலேயே கட்டுக்குள் வைப்பதற்கு இவரது பந்துவீச்சு உதவும் என்பதால் இவர் அணிக்குள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் முதல் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் செல்வதற்கும் அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
About the Author
RK Spark