அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

புதுடெல்லி: ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபு​தாபி​யில் நேற்று இந்​திய, யுஏஇ உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மத்​திய வர்த்​தக அமைச்​சர் பியூஷ் கோயல் பங்​கேற்​றார். அப்​போது அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் மிக நெருங்​கிய நட்பு நாடு​கள். இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்தை சரியான திசை​யில் செல்கிறது.

இந்​தி​யா​வின் நம்​பக​மான நட்பு நாடாக அமெரிக்கா விளங்​கு​கிறது. இரு நாடு​களுக்​கும் பலன் அளிக்​கும் வகை​யில் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும். இவ்​வாறு அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​தார். இந்​தி​யா, அமெரிக்கா இடையே இது​வரை 5 சுற்று பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்று உள்​ளன.

ஆகஸ்ட் 25-ம் தேதி 6-ம் சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெறு​வ​தாக இருந்​தது. ஆனால் இந்​திய பொருட்​கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்​த​தால் பேச்​சு​வார்த்தை தடைபட்​டது. இந்த சூழலில் அமெரிக்க வர்த்தக குழு​வினர் சில நாட்​களுக்கு டெல்லி வந்​தனர்.

அப்​போது கருத்து வேறு​பாடு​கள் களை​யப்​பட்டு பேச்​சு​வார்த்​தையை முன்​னெடுத்​துச் செல்ல முடிவு செய்​யப்​பட்​டது. இரு நாடு​கள் இடையே விரை​வில் 6-ம் சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற உள்​ளது. இதில் இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.