சென்னையில் வைர வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உட்பட 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகாரில் வைர வியா​பாரி, ரியல் எஸ்​டேட் அதிபர் வீடு உட்பட சென்​னை​யில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடை​பெற்​றது. சென்னை சைதாப்​பேட்டை ஸ்ரீநகர் காலனி​யில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் ரெட்​டி. ரியல் எஸ்​டேட் நிறு​வனம் நடத்தி வரு​கிறார். சென்னை மற்​றும் புறநகரில் பிரம்​மாண்ட கட்​டிடங்​களை கட்​டிவரும் இவரது நிறு​வனம், அரசு சார்​பில் நடை​பெறும் பல்​வேறு கட்​டு​மானப் பணி​களி​லும் ஈடு​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், இவரது வீட்​டில் நேற்று காலை​முதல் துப்​பாக்கி ஏந்​திய சிஆர்​பிஎப் பாது​காப்​புடன் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர். செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் ராமகிருஷ்ணன் ரெட்​டி​யின் அலு​வல​கத்​தி​லும் சோதனை நடைபெற்றது.

இவரது நிறு​வனம் பல்​வேறு இடங்​களில் முதலீடு செய்து சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை​யில் ஈடு​பட்​ட​தாக​வும், குறிப்​பாக, பண மதிப்​பிழப்பு காலத்​தில் கோடிக்​கணக்​கான ரூபாய் செல​வில் சென்னை ஈசிஆரில் நிலங்​களை வாங்​கி​யிருப்​ப​தாக​வும் எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடை​பெற்​ற​தாக கூறப்​படு​கிறது.

அது​மட்​டுமில்​லாமல், பண மதிப்​பிழப்பு காலத்​தில் ராமகிருஷ்ணன் ரெட்டி மூலம் பலர் பழைய ரூ.500, ரூ.1000 நோட்​டு​களை மாற்​றிருப்​ப​தாக, கடந்த 2017-ம் ஆண்டு நடை​பெற்ற ஒரு வரு​மான வரி சோதனை​யின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள், அவர் தொடர்​புடைய இடங்​களில் சோதனை​யில் ஈடு​பட்​டிருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. மேலும், இவர் சசிகலா​வின் பினாமி என்​றும் கூறப்​படு​கிறது.

பண மதிப்​பிழப்பு காலத்​தில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்​டு​களை கொடுத்து காஞ்​சிபுரத்​தில் சசிகலா ஆலை ஒன்றை வாங்​கி​யிருந்​த​தாகக் கடந்த சில நாட்​களுக்கு முன்பு சிபிஐ எஃப்​ஐஆரில் தகவல் வெளி​யாகி இருந்​தது. இந்த சூழ்​நிலை​யில், ராமகிருஷ்ணன் ரெட்டி தொடர்​புடைய இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடை​பெற்று வரு​கிறது.

சென்னை புரசை​வாக்​கம் தம்பு சாமி தெரு​வில் வசித்து வரும் வைர வியா​பாரி மோகன்​லால் கத்​தாரி வீட்​டிலும், சவு​கார்​பேட்​டை​யில் உள்ள அவரது நகைக்​கடை​யிலும் காலை 6 மணி​முதல் சோதனை நடை​பெற்​றது. மேலும், திரு​வான்​மியூர், கீழ்ப்​பாக்​கம், கோடம்​பாக்​கம் உட்பட சென்​னை​யில் 6 இடங்​களில் நேற்று காலை​முதல் அமலாக்​கத் துறை​யினர் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

இந்த சோதனை​யில் முதலீடு​கள், சொத்து தொடர்​பான ஆவணங்​கள் மற்​றும் லேப்​டாப் உள்​ளிட்ட டிஜிட்​டல் ஆவணங்​கள் முதலிய​வற்றை கைப்​பற்றி அமலாக்​கத் துறை அதி​காரி​கள் ஆய்வு செய்து வரு​வ​தாகத் தெரி​கிறது. சோதனை தொடர்​பான எந்த ஒரு தகவலை​யும் அமலாக்​கத் துறை இது​வரை வெளி​யிட​வில்​லை. சோதனை முழு​மை​யாக முடிவடைந்த பிறகே, சோதனை விவரங்​கள், கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் குறித்து முழு தகவல்​கள்​ வெளி​யாகும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.