மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 2027 டிசம்பரில் முதல்கட்ட ரயில் பாதை திறப்பு

மும்பை: மும்​பை-அகம​தா​பாத் புல்​லட் ரயில் பாதை திட்​டத்​தில் மகா​ராஷ்டிர மாநிலம், தானே மாவட்​டத்​தில் உள்ள ஷில்​பட்​டா, நவி மும்​பை​யில் உள்ள கன்​சோலி இடையி​லான 4.88 கி.மீ. நீள சுரங்​கப்​பாதை நேற்று தோண்டி முடிக்​கப்​பட்​டது.

இதன்​மூலம் இத்​திட்​டத்​தில் ஒரு முக்​கிய மைல் கல் எட்​​டப்​பட்​டது. ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் முன்​னிலை​யில் இறுதி அகழ்​வுப் பணி நடை​பெற்​றது. பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது:

புல்​லட் ரயில் நடுத்தர வர்க்​கத்​தினருக்​கான போக்​கு​வரத்​தாக இருக்​கும். இதன் கட்​ட​ணங்​கள் நியாய​மான​தாக இருக்​கும். மும்பை – அகம​தா​பாத் பயண நேரத்தை 9 மணி நேர​மாக கூகுள் மேப்ஸ் செயலி காட்​டு​கிறது. இந்த தூரத்தை புல்​லட் ரயி​லில் 2 மணி 7 நிமிடங்​களில் கடக்க முடி​யும். புல்​லட் ரயில் திட்​டத்​தில் சூரத்​-பில்​மோரா இடையி​லான முதல் பிரிவு 2027 டிசம்​பரில் தொடங்​கப்​படும்.

2028-ல் தானே​வும் 2029-ல் பாந்த்ரா குர்லா காப்​ளக்​ஸும் இணைக்​கப்​படும். காலை, மாலை நெரிசல் நேரங்​களில் அரை மணி நேரத்​துக்கு ஒரு ரயில் இயக்​கப்​படும். இந்த வழித்​தடம் முழுமை அடைந்​தவுடன் நெரிசல் நேரங்​களில் 10 நிமிடத்​துக்கு ஒரு ரயில் இயக்​கப்​படும். மும்பை – அகம​தா​பாத் பயணத்​திற்கு டிக்​கெட் முன்​ப​திவு தேவை​யில்​லை. பயணி​கள் ரயில் நிலை​யம் வந்து ரயி​லில் ஏறிச் செல்​லலாம். இவ்​வாறு அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார்.

மும்பை – அகம​தா​பாத் புல்​லட் ரயில் பாதை​யில் ஷில்​பட்​டா​வில் இருந்து பாந்த்ரா குர்லா காம்ப்​ளக்ஸ் இடையே 21 கி.மீ. தூரத்​துக்கு சுரங்​கப்​பாதை அமைக்​கப்​படு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.