இந்தோனேசியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் ரத்து…

இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி சலுகைகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், வன்முறையாக மாறி, ஆறு பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஜகார்த்தா உட்பட பல நகரங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழகிழமை டெலிவரி டிரைவர் ஒருவரை போலீஸ் வாகனம் மோதிய காட்சி வெளிவந்ததை அடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. மாகாசார் (Makassar) நகரில் கவுன்சில் கட்டிடம் எரிக்கப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர் என்று யோக்யாகார்த்தா பல்கலைக்கழகம் உறுதி செய்தது. கலவரத்தை அடுத்து தனது சீன பயணத்தை ரத்து … Read more

கழிவறை பிரச்னையால் பாட்டில்களில் சிறுநீர் கழித்த பயணிகள்; பறக்கும் விமானத்தில் என்ன நடந்தது?

விர்ஜின் ஆஸ்திரேலியா என்ற விமானத்தில் பயணிகள் சிறுநீரைக் கழிக்க பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பாலியில் உள்ள டென்பசார் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்ற விமானத்தில்தான் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. விமானத்தின் கழிப்பறைகளில் ஒன்று பராமரிப்பு பிரச்னை காரணமாகப் புறப்படும் முன்பே அதன் பயன்பாட்டை இழந்திருக்கிறது. மீதமுள்ள கழிப்பறைகளும் ஆறு மணி நேரப் பயணத்திற்குள் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமானத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். விமானம் விமான … Read more

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் மாநகராட்சி அதிகாரிகளை எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியை சேர்ந்த பி.தாமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும், வெவ்வேறு காரணங்களை கூறி, அவற்றை நிறைவேற்ற தவறியதாக சென்னை … Read more

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: தண்ணீர் அருந்தப் போவதில்லை என மனோஜ் ஜாரங்கி சபதம்

மும்பை: மராத்தா சமூகத்துக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, 4 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரும் மனோஜ் ஜாரங்கி இன்று முதல் தண்ணீர் அருந்துவதை நிறுத்துவதாக சபதம் செய்துள்ளார். ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜாரங்கி நடத்தி வருகிறார். இதுகுறித்து … Read more

பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் பேச்சு

தியான்ஜின்: பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். எஸ்சிஓ உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்திய சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “இரண்டாம் உலகப் போர் குறித்த சரியான வரலாற்றுக் கண்ணோட்டத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும்” என … Read more

ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி; இனி TET கட்டாயம்… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

TET Compulsory: ஆசிரியர்கள் தங்களின் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கோபிநாத் போல தொகுப்பாளராகும் பார்த்திபன்! புதிய நிகழ்ச்சியில் அறிமுகம்!

நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம் கண்டுபிடிப்பாளர்களுக்கான புதுமையான நிகழ்ச்சி! 

அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? அன்புமணி ராமதாஸ்!

அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? துரோகத்திற்கான பெருந்தண்டனையிலிருந்து திமுக  தப்ப முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   

பிட்னெஸ் டெஸ்ட்டில் ரோகித் சர்மா.. பாஸ் ஆனாரா? உண்மை என்ன?

அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதையடுத்து இந்தாண்டு மே மாதத்தில் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். இதனால் இனி அவரை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பார்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.  Add Zee News as a Preferred Source இந்த நிலையில், ரோகித் சர்மாவிற்கு யோ – … Read more

“BAD GIRL-தான் எனது தயாரிப்பின் கடைசி படம்; தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுகிறோம்'' – வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘BAD GIRL’. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். அமித் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது. … Read more