இன்று முதல் தமிழக அரசு வழங்கும் ரூ.3000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழக அரசு பெண்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் என பலருக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மாதம் ரூ.3000 உதவித்தொகை யார் யாருக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.

கணபதி விழாவை கோலாகலமாக நடத்தி வந்த பிரபல தாதா-வின் மகன் விநாயகர் சதுர்த்தியன்று மரணம்

மும்பையை கதிகலங்க வைத்தவர் பிரபல தாதா வரதராஜன். நிழல் உலக தாதாவாக இல்லாமல் ’70 – ’80 களில் மும்பையின் நிஜ உலக தாதாவாக வலம் வந்த வரதராஜன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது மாடுங்காவில் கணபதி விழா நடத்திவந்த இவரது வரலாறு பலத் திரைப்பட இயக்குனர்களுக்கு பணமாக மாறியது. ’88ல் மறைந்த இவரது குடும்பத்தில் பலர் மும்பையை விட்டு வெளியேறி தனித்தனி ரூட்டில் பயணிக்க வரதா பாயின் மகனான மோகன் … Read more

Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?

’’‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பழமொழி. எலும்பு வலிமை தேவைப்படும் அனைவருக்குமே எள்ளைப் பரிந்துரைக்கலாம். மூட்டுத் தேய்மானத்தைத் தடுப்பதற்கும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருப்பதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளைச் சீராக்குவதற்கும் உடலில் எண்ணெய்ச்சத்து அவசியம். எண்ணெய் வித்தின் தாவர வகையைச் சேர்ந்த எள், இதற்கு உதவிபுரியும். இன்று வழக்கத்திலிருக்கும் நல்லெண்ணெய்யின் அடிப்படையே எள்தான். sesame seeds இது, ஒருகாலத்தில் அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பிடித்திருந்தது. இன்றோ, பலரும் உடல் உஷ்ணத்தைக் காரணம் காட்டி, அன்றாட உணவில் அதைத் … Read more

‘சாமி இல்லை என்று சொல்லி தமிழ் மண்ணை கலங்கப்படுத்தாதீர்கள்’ – இயக்குநர் பேரரசு பேச்சு

புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் இந்து முன்னணி மற்றும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் பேரரசு பேசினார். குறிப்பாக புதுச்சேரி சாரம் பகுதியில் 21 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிந்த 3-ம் நாளன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் … Read more

தெருநாய் வழக்கால் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி நகைச்சுவை பேச்சு

புதுடெல்லி: டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களால் பலர் பாதிக்​கப்​படு​வ​தாக​வும், குறிப்​பாக குழந்​தைகள் தெரு​நாய் கடி​யில் உயி​ரிழப்​ப​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற 2 நீதிப​தி​கள் அமர்​வு, ‘‘டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களை பிடித்து காப்​பகங்​களில் பராமரிக்க வேண்​டும். அவற்றை மீண்​டும் தெருக்​களில் விடக்​கூ​டாது’’ என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உத்​தர​விட்​டது. இதற்கு செல்​லப் பிராணி​கள் வளர்ப்​பவர்​கள், சமூக ஆர்​வலர்​கள் பலர் கண்​டனம் தெரி​வித்து போராட்​டங்​கள் நடத்​தினர். … Read more

ஆஸி.யில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து போராட்டம்

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறி வரு​கின்​றனர். அந்​நாட்​டில் வசிக்​கும் 2-ல் ஒரு​வர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக அல்​லது அவரது பெற்​றோர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக உள்​ளார். இதற்கு நவ-​நாஜிக்​கள் மற்​றும் வலது​சாரி அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வெளி​நாட்​டினரின் குடியேற்​றத்​தைத் தடுக்க வலி​யுறுத்தி நாடு முழு​வதும் நேற்று மாபெரும் போராட்​டம் மற்​றும் பேரணி நடை​பெற்​றது. ‘ஆஸ்​திரேலி​யா​வுக்​கான பேரணி’ என்ற பெயரில் நடை​பெற்ற இதில் பல்​லா​யிரக்கணக்​கானோர் பங்​கேற்​றனர். சிட்னி நகரில் நடை​பெற்ற போராட்​டத்​தில் சுமார் 8 … Read more

குறைந்த பட்ஜெட்டில் நீங்களும் கொடைக்கானலுக்கு செல்ல முடியும்! எப்படி தெரியுமா?

சரியான திட்டமிடல் இருந்தால், குறைந்த பட்ஜெட்டில் கொடைக்கானலின் அழகை முழுமையாக சுற்றி பார்க்க முடியும். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அணியில் இருந்து திலக் வர்மா திடீர் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு!

ஆசிய கோப்பை 2025 தொடருக்காக பலரும் காத்துக் கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தொடர் இருக்கும் என்பதால் ஒவ்வொரு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் திலக் வர்மா, துலீப் ட்ராபி தொடரிலிருந்து விலகியுள்ளார். துலீப் டிராபியில் தெற்கு மண்டல அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக புதிய கேப்டன் மற்றும் மாற்று … Read more

சென்னையின் முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்: 1,800-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை: சென்னையில் விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் பந்தல் அமைத்து, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 1,800-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. … Read more

உ.பி.யின் ஆக்ராவில் போலி மருந்து விற்பனையாளர் கைது: புதுச்சேரியில் தயாராகி அனுப்பப்படுவதாக தகவல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவின் மொத்த மருத்து சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லக்னோவில் உள்ள மாநில காவல் துறை சிறப்பு படை (எஸ்டிஎப்) தலைமையகத்துக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்யும் பணி உதவி மருந்து ஆணையர் நரேஷ் மோகன் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழுவும் எஸ்டிஎப் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர். எஸ்டிஎப் படையினர் ஒரு ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனர். … Read more